ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவித்தல்
நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(12) காலை 7 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்ன?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்...
கொழும்பில் வீதியெங்கும் இராணுவம்!
கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும்...
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும்- பாப்பரசர்
போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் பரிசுத்த பாப்பரசர்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்ற பாதைக்கு மேற்கொள்ளப்படும் உள்ளூர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...
இராஜினாமா செய்ய தயார் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
இரண்டு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்படவில்லை என்றால் தான் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற மேஜர் கமல் குணரத்னவும்,...
‘பிரதமர் பதவி’யை ஏற்கும் அறிவிப்பை சஜித்தும் விடுத்தார்!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான லக்ஷ்மன் கிரியல்ல இன்று அறிவித்தார்.
விசேட...
6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்க தயார் – அநுர அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயார் என அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள...
எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.











