காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை,...
இருப்பை தக்க வைக்கும் அரசின் முயற்சி தோல்வி – கம்மன்பில பகீர் தகவல்
" தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில...
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...
பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு – பொகவந்தலாவையில் சோகம்! விசாரணை தீவிரம்
பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடமல் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி பயிலும், பாரதிதர்ஷன் (வயது - 18) என்ற மாணவரே இவ்வாறு...
தேசிய ரீதியில் முதலிடம் – யாழ். மாணவன் சாதனை!
" எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன்." என்று 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன்...
களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 39...
அரசுக்கு ஒரு மாதம் கெடு – நாளை கொழும்பு சுற்றிவளைப்பு!
அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கு பயணம் செய்யும் தனது பிரஜைகளுக்கு எச்சரித்த பிரிட்டன்
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறும்பேற்றுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள...
ஒபாமாவுக்கும் கொரோனா தொற்று
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி...










