பிரதமர் பதவியை ஏற்க தயார் – கரு
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் உள்ளடங்கிய...
பொதுத் தேர்தலுக்கான அழைப்பே நெருக்கடிக்கு நிலையான தீர்வு
நாட்டின் நெருக்கடி நிலைக்கு நிலையான தீர்வுகாண்பதற்கு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதே தீர்வாக அமைய முடியுமென சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பது மற்றும் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதே...
ஊடரங்கு குறித்து வெளியான தகவல்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளை காலை...
அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.
அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில், ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அவர்...
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கொள்கை வகுப்பாளர்கள் மக்களின் இறையாண்மைக்கு செவிசாய்க்க வேண்டும்
நீண்ட கால பணி பகிஷ்கரிப்பு செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும் என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் அறிவுறுத்தியுள்ளது
உலகை வியப்பில் ஆழ்த்திய படைப்புக்களை நிர்மாணித்த இலங்கைக்கு, அந்த பெருமைமிகு...
வீரக்கெட்டியவில் சூடு -இருவர் பலி! ஐவர் காயம்!!
வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை...
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் பலி
நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்...
போராட்டத்துக்கு மத்தியில ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அமரகீர்த்தி அதுகோரள எம்.பியும், அவரின் பாதுகாவலர்களும் நகரில் ஓடுவதுபோல காணொளி வெளியாகியுள்ளது .
எனினும்,...
அலி சப்ரி இராஜினாமா
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள்...









