வாக்கெண்ணும் பணி மாலை 4.15 இற்கு ஆரம்பம்!
தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 14 ஆம் திகதி மாலை 4.15 இற்கு ஆரம்பமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.
ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும்...
வாக்குச்சீட்டை படமெடுக்க தடை!
வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
“வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும்...
மதுபானசாலைகளுக்கு நவ. 14, 15ஆம் திகதிகளில் பூட்டு!
இம்மாதம் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக...
ஹப்புத்தளையில் ரயிலில் இருந்து விழுந்து பல்கலை மாணவி படுகாயம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை புகையிரத நிலைய...
மரக்கறி விலைப்பட்டியல் (12.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றைய காலநிலை எப்படி? (12.11.2024)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் சில...
தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
"வடக்கு மக்களே உங்கள் காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுப்போம்."
- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் தேர்தல்...
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில்...
சிறுவர்களுக்கிடையில் பரவும் வைரஸ்
சிறுவர்களுக்கிடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த காய்ச்சல் நிலைமை மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில்...
அமைதியான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...













