கல்கந்தை தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தீ – புத்தகங்கள் எரிந்து நாசம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், கல்கந்தை தோட்ட பிரிவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார கசிவினால் இத்தீ பரவல் ஏற்பட்டதா அல்லது எவரேனும்...
இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
எனினும்,...
கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: கம்பளையில் சோகம்
கம்பளை, அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற - பாழடைந்த கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
ரமலான் பண்டிகையையொட்டி கொழும்பில் இருந்து கம்பளையில் உள்ள தமது வீட்டுக்கு வந்திருந்தநிலையிலேயே இன்று (15)...
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. எதிர்வரும் 30 ஆம்...
கத்திக்குத்தில் ஒருவர் பலி: திருமலையில் பயங்கரம்!
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கத்திக்குத்து தாக்குதலினால் உயிரிழந்தவர் சேருநுவர கல்வல...
தலவாக்கலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை பிரதேச...
பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
பதுளை, பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடைக்கு முன்னாலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புசல்லாவை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணொருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இருந்து...
குதிரை ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்ற நுவரெலியாவை சேர்ந்த லோகேந்திரன் ரவிக்குமார்
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் “ரோயல் டேப்" கிளப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் கவர்னர்ஸ் கிண்ணத்திற்கான குதிரைப் பந்தயப் போட்டியில் நுவரெலியா ரேஸ்கோஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட...
நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் புசல்லாவையில் விபத்து: இருவர் உயிரிழப்பு
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேனொன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த வேனொன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே...













