சம்பள உயர்வை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்: அமைச்சர் அறிவிப்பு!
“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துவிட்டன.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வகையில் நியாயமான...
கலஹாவில் இபோச பஸ்மீது மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி: 9 பேர் காயம்!
கலஹா, தெல்தோட்டை வீதியில் ஹால்வத்த பகுதியில் இபோச பஸ்மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி இன்று (6) பிற்
பகல் பயணித்த பஸ்மீதே...
இறம்பொடையில் குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!
இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், எழுவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே...
தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!
தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!
தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
போப்பிட்டிய பகுதியிலுள்ள குளமொன்றுக்கு அருகில் இருந்தே பிரதேச வாசிகளால் குறித்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாத்த ஹேவாஹேட்ட பிரதேச...
கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!
மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையான கிட்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் சம்பவ...
தலவாக்கலை விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்!
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று இரண்டு இளைஞர்கள் வாகனமொன்றில் மோதி சென்ற சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...
வழக்கை முடித்து உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்குகணபதி கனகராஜ் கடிதம்
வழக்கை முடிவுறுத்தி உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமரும் ,கல்வி அமைச்சருமான...
சீதையம்மன் ஆலயத்தில் கொள்ளை: 7 உண்டியல்கள் உடைப்பு!
நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி...
போதைப்பொருளுடன் இபோச பஸ் சாரதி நல்லத்தண்ணியில் கைது!
இபோச பஸ் சாரதியொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பஸ் நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே, நல்லத்தண்ணி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக...













