கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம்...
உணவில் கரப்பான் பூச்சிகள் : விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட, மனித...
பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்த ஜோடி
பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்....
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேல் மாகாணத்தில் மேற்கு சுமாத்ராவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 06:05 மணிக்கு...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்? அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக...
பதுளையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் இன்று ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா
உள்ளாட்சி தேர்தல் எப்போது? நாளை தீர்க்கமான சந்திப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு...
மஹிந்த தேசப்பிரிய மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் – விண்ணப்பமும் சமர்ப்பிப்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றும் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவில்...
கட்சி சகாக்களிடம் சீறிப்பாய்ந்த பஸில்
தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லாவிட்டால், வீடு செல்லுங்கள் என - மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு செம டோஸ் கொடுத்துள்ளாராம் பஸில் ராஜபக்ச.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட...
எதிரணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நாட்டுக்கு ஆபத்து – அரவிந்தகுமார் எச்சரிக்கை
அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...







