மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தானும் தற்கொலை – நுவரெலியாவில் சம்பவம்
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணையில்...
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி!
இணையம் மூலம் பொது பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த செயற்பாடுகளை விரிவுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்து...
சமனல வாவியிலிருந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை சமனல வாவியிலிருந்து விநியோகிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று (07) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
13 குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...
வர்த்தகர் மீது கத்திக்குத்து தாக்குதல் – நானுஓயா நகரில் பயங்கரம்
நானுஓயா நகரில் வர்த்தகர் ஒருவர்மீது இன்று கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பண கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி, பின்னர் கத்திக்குத்தில்...
மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி
மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
54 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: இருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...
திருகோணமலையில் விமான விபத்து – இருவர் உயிரிழப்பு
திருகோணமலை, சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படையினரே உயிரிழந்துள்ளனர்.
விமானப்படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஓய்வு பெறுகிறார் தர்ஜினி சிவலிங்கம்
இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும்,...
ஜி -20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகை!
இந்தியாவில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
2023 இல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில்...





