கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை மந்திரி ராஜினாமா
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்தநிலையில் ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில்...
மேலதிக வகுப்புக்களுக்கு நள்ளிரவு முதல் தடை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு இன்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ம்...
UPDATE: ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் 4 பேர் பலி
கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு...
காலி துறைமுகத்தை சுற்றுலாப் பயணிகளுக்கான துறைமுகமாக மாற்ற நடவடிக்கை
காலியில் தற்போது உள்ள துறைமுகத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்கான துறைமுகமாக மாற்றுவதற்குத் துறைமுக அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 17 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு...
ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை?
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி...
நீண்ட வார இறுதி விடுமுறை, எச்சரிக்கை விடுக்கும் சுகாதார தரப்பினர்
சுதந்திர தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட வார இறுதி விடுமுறைக் காலத்தில் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம்...
தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு?
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
கொழும்பு துறைமுக மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்பு
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேற்படி மின்முனையத்திற்கு...
நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.











