பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பம் கோரல்! மலையக இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம்….
இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தினை எமது சமூக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2-வது ஏவுகணை சோதனை ஆகும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா...
அவசரமாக டில்லி பறந்தார் இந்திய தூதவர்! 18 ஆம் திகதியே கூட்டு ஆவணம் கையளிப்பு
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப்...
சஜித் தலைமையில் மலையகத்தில் பொங்கல் விழா!
தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் விழா நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்தியத்தூதுவர்...
தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு – விசாரணை வேட்டை தீவிரம்!
பொரளை, வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவர்கள் மூவரும் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
மேற்படி தேவாலயத்தில் நேற்று...
நாட்டில் மேலும் 623 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 623 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 593,072 ஆக அதிகரித்துள்ளது.
காங்கிரஸின் பயணம் மக்களுக்கானது! பாரத் விளக்கம்
' மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே எமது பயணம் அமைந்துள்ளது. அதேபோல வெற்று கோஷம் எழுப்புபவர்களுக்கு விமர்சனங்களை...
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு
பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அதன் செயலாளராக இசுரு பலபட்டபெதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடுத்தர வர்க்கத்தினருக்கான நிரந்தர வீட்டுத்திட்டம்- அமைச்சரவை அனுமதி
வீடு அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணி இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்காக நிரந்தமாக வீடொன்றை பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்காக குறைந்த விலையில் இவ்வாறு அடுக்குமாடி...












