மெரயா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் குறித்த அறிவித்தல்…..
நுவரெலியா மாவட்டம், லிந்துலை - மெராயா தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்த்தன பஞ்சகுண்டபக் ஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை...
டிக்கோயா தெற்கு வனராஜா பகுதியில் பஸ்தரிப்பிடம் திறப்பு!
மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிதியொதுக்கீட்டில், நோட்டன் - அட்டன் பிரதான வீதியின் தெற்கு வனராஜா பகுதியில் நவீன பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு இன்று கையளிக்கப்பட்டது.
அட்டன் தனியார் பஸ்...
சுகாதார சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பு – மலையக வைத்தியசாலைகளில் நோயாளிகள் அவதி!
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு - நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு
அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று...
வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை…!
மலையகத்துக்கான புகையிரத சேவைகள் இன்று (16) அதிகாலை 4 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விசேட புகையிரதம் நேற்று மாலை...
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள்...
O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!
களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
15 மற்றும் 16 வயதுகளுடைய இரு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ள இரு மாணவிகளும் இம்முறை கபொத சாதாரணதரப் பரீட்சைக்கு...
மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவிலும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!
மலையக தியாகிகள் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நுவரெலியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்திலேயே நிகழ்வு...
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தைவிடவும் கரட் விலை உச்சம்!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வரலாற்றில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை...
மலையகத்தில் நடைபெறும் தேசிய பொங்கல் விழா திகதி மாற்றம்…!
தேசிய பொங்கல் விழா ஜனவரி 20 ஆம் திகதி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அதனை ஜனவரி 21 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...
மண்சரிவால் 100 பேர் இடம்பெயர்வு – விவசாய நிலமும் நாசம்!
படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அங்கட (135/C) கிராமசேவகர் பிரிவில் வரதொல தனியார் தோட்டத்தில் நேற்று (13) ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர், வராதொல சிங்கள வித்தியாலயத்தில்...













