நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில்...
இன்று 586 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 567,522 அதிரித்துள்ளது.
கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் பலி!
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(04) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் – விசாரணை அறிக்கைகள் அடுத்த வாரம் வெளியாகும்
சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள்குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் முதற்கட்ட விசாரணைகள் சம்பந்தமான தகவல்களை வெளியிடவுள்ளது.
அத்துடன் இன்று(05) முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு...
‘நன்மதிப்பை இழந்துள்ளது நாடாளுமன்றம்’ – திஸ்ஸ கவலை
" நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்." - என்று ஐக்கிய...
மின் துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு
நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாளை (06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 316 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 316 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 542,326 ஆக அதிகரித்துள்ளது.
ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார் – ஜே.வி.பி. அதிரடி அறிவிப்பு
" இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய - அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்." - என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!
கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (05) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேங்காய் நிலக்கரி,...
இலங்கையரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை – மனோ வலியுறுத்து
பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாகக் கொலைசெய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
" சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து,...











