கல்வி மறுசீரமைப்பு முழுமைபெற 10 ஆண்டுகள் எடுக்கும்!
" கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முற்றாக முழுமைப்பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்வரை செல்லும்." - என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும்...
கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த நிலை...
10 ஆயிரம் வீட்டு திட்டம் – இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...
வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கொலை!
வத்தளை, எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையை சேர்ந்த 68 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள்...
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.
கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து திறைசேரிக்கு ரூ. 7 பில்லியன்!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை இன்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
COP 28 மாநாட்டிற்கு ஜனாதிபதியிடமிருந்து 03 விசேட முன்மொழிவுகள்
அச்சுறுத்தலுக்குள்ளாகும் சாத்தியமுள்ள மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான "காலநிலை நீதிக்கான மன்றத்தை" நடைமுறைப்படுத்துதல் உட்பட மூன்று முன்மொழிவுகளை ஜக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார...
தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி
தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான 'தேர்தல் பிரச்சார' நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம்...
30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'இஸ்ரேல்- ஹமாஸ் போர்' கடந்த மாதம் 7 ஆம்...
இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது கேபிள் கார் – ஒப்பந்தம் கைச்சாத்து
கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 147 கோடி) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக...



