தங்கம் விலை இன்றைய நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் இன்றைய(09.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மின்சாரம் தாக்கி மாணவி மரணம்
மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு - கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.
பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி...
வாகன விபத்தில் இளம் தம்பதி பலி
அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில்...
ரயில் விபத்து: மலையகத்துக்கான சேவைகள் பாதிப்பு
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்...
தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லையாம்!
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஆனால், தமிழ்க் கட்சிகள்தான் குழப்பத்தில் உள்ளன. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால்தான் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மூவின மக்களும் ஏற்கும்...
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமனதிஸ்ஸகம பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆககரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு...
எந்தச் சந்தர்ப்பத்திலும் மின்வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை-கஞ்சன விஜேசேகர
நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக்...
குடும்ப தகராறு-பாடசாலை மாணவன் வெட்டிப் படுகொலை!
உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பாடசாலை மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகல், பண்டவஸ்நுவரை மேற்கு பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு...
கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கானை சேர்ச் வீதி பகுதியில் இன்றையதினம் (08) கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 5 லீற்றர் கசிப்பு...
“ஓரணியில் திரள்வோம் – உரிமைகோரி நடப்போம் – வெல்வோம்” – அனைவருக்கும் சிவநேசன் அழைப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் கோரிக்கை...






