புதிய இராணுவ தளபதி பதவியேற்பு
இராணுவத் தளபதி விக்கும் லியனகே தமக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையின் 24 வது இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே...
சஷி வீரவங்கசவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
சஷி வீரவங்கசவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்கச இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு, களுத்துறை,...
அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வௌியிடப்பட்டுள்ளது.
Duties and Functions 30.05.2022
வரிச் சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி
வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துகளை விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டுக்கு...
மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்பு (படங்கள்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 31.05.2022 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு...
2000 பேக்கரிகளுக்கு மூடுவிழா!
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமைமா விலை உயர்வால் பாண்...
மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு! வவுனியாவில் பயங்கரம்!!
வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையை இழந்த 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார்...
கந்தப்பளையில் காணி விழுங்கிய பூதம்! காங்கிரசுக்கு தரகு பணம்? கருப்பையா ஜெயராம் வெளியேறியது ஏன்?
" ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் கந்தப்பளையில் பொதுசந்தை நிர்மாணிப்பதற்கு 80 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த காணி தற்போது தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஒருவர் ஊடாக, காங்கிரஸ்...











