வன்முறை வேண்டாம் – அமைதி காப்போம்! அறவழியில் போராடுவோம்!!
" இலங்கையில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையை இனக்கலவரமாக மாற்றுவதற்கு சில விஷமிகள் முற்படுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்தையும் கையில் எடுக்க முற்படக்கூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு...
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
அடை மழையால் நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு...
கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து! நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
அத்துடன், சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அங்கொட சந்தியில் துப்பாக்கிச் சூடு
அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்த கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை வீழ்த்தப்பட்டது
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர்.
ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...
பிரதமர் பதவியை ஏற்க தயார் – சம்பிக்க ரணவக்க அதிரடி
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.”
இவ்வாறு ஐக்கிய...
அமைதியை பேணுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை
பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து...
இதுவரை அழிக்கப்பட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துகள் ( விபரம்)
ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ (கார்ல்டன் இல்லம் – வீரகெட்டிய & மெதமுலன வலவ்வ)
ராஜபக்ஸ...










