ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இவற்றுடன், அவருக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.
அனைத்து நான்கு குற்றப்பத்திரிகைகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதித்தார்.
எவ்வாறாயினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.










