தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன.

தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் நிலைமைக்கு ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

Related Articles

Latest Articles