Home Blog Page 3561

‘ஜீவன் தலைமையில் இ.தொ.காவின் வெற்றிப்பயணம் தொடரும்’

இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தலைவர் இருக்கின்றபோது கட்சிபேதமின்றி மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அவரின் மகன் ஜீவன் தொண்டமான் இன்று தலைமையேற்றுள்ளார். அவரின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்நிலையில் இ.தொ.காவை பலப்படுத்துவதற்காகவும், ஜீவனுக்காகவும் இளைஞர் கூட்டம் திரள்வதை காணக்கூடியதாக உள்ளது.

பெருமளவான மக்களும் எமது கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் கட்சியில் இணையாவிட்டாலும் பரவாயில்லை, மலையக சமூகமாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என எமது தலைவர் கூறினார். அந்த ஒற்றுமையை தற்போது காணமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலின்போது மலையக மக்களுக்காக எமது தலைவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அடுத்துவரும் 10 ஆண்டுகள் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதியாக இருப்பார். அவர் தலைமையிலான அரசாங்கமே செயற்படும். அந்த கூட்டணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பங்காளிக்கட்சியாக இருக்கின்றது. எனவே, மக்களுக்கான சேவைகளை எம்மால் தொடரமுடியும்.

தேர்தல்  முடிவடைந்ததும் சில அரசியல்வாதிகள் நுவரெலியா மாவட்டத்தைவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வாறு அல்ல. உங்களுடன்தான் இருக்கப்போகின்றார். இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஏனையோருக்குமிடையில் உள்ள வித்தியாசமாகும்.

காங்கிரஸ் அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் செய்துள்ளது. எனவே, மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து இ.தொ.கா. உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

பொகவந்தலாவயில் குளவிக்கொட்டு – ஐவர் பாதிப்பு

பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று (6) மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மலையில் கற்குகை ஒன்றில் கூடுகட்டியிருந்த குளவிகளே, கலைந்துவந்து தாக்கியுள்ளன.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘அரசியல் நடிகர்களுடன் இணைந்து செயற்படமுடியாது’ -ஜீவன்

“மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது. அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது. நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவித்துவிட்டன. ஆனால், நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை எம்மால் ஏற்கமுடியாது. மூன்று மாதங்களுக்கு 100 ரூபா கொடுப்பனவை வழங்கினர்.இதனால் நிலுவை சம்பளத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, நாம் நிபந்தனையை ஏற்று கையொப்பமிட்டால் இவர்களுக்கும், எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா?இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையிண்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?

நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்கவேண்டும். அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பாமீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் களத்துக்குசென்று நான் மக்களுக்கு சேவைசெய்துள்ளேன். மண்சரிவு இடம்பெறும்போது உடனே சென்றுள்ளேன். ஆனால், அதனையும் வாய்கூசாமல் விமர்சிக்கின்றனர். தீ விபத்து இடம்பெற்ற ஒரு பகுதிக்கு சென்றால், ஜீவன் தொண்டமான்தான் தீ வைத்துள்ளார் என கூறுமளவுக்கு கீழ்த்தரமாக அரசியல் நடத்துகின்றனர்.

இப்படியான கருத்துகளை பார்த்துவிட்டு வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் சிரிக்கின்றனர். தற்போதுள்ள அரசியல் சாக்கடையென விமர்சிக்கின்றனர். அதனை சுத்தப்பட்டுத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்கே செல்வதில்லை, பல்கலைக்கழகத்தை வைத்து என்ன செய்வது என சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக இருந்த திட்டங்களை மக்களுக்காக நாம் முன்னெடுக்கும்போது விமர்சிக்கின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம்.

நீங்கள் தலைமைத்துவத்தில் இருக்கின்றீர்கள். இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கலாம்தானே என நீங்கள் கேட்கலாம். தூங்குபவனை எழுப்பலாம். ஆனால், தூங்குபவன்போல் நடிப்பவனை எழுப்பமுடியாது என எனது தந்தை அடிக்கடிகூறுவார்.

ஆயிரம் ரூபா வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க கூறவே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். அதேபோல் தொண்டமான் பெயர்பலகையை அகற்றவில்லை எனவும் குறிப்பிடுகின்றார். ஆனால்இ உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். இப்படியானவர்களுடன் இணைந்து வேலைசெய்யமுடியுமா?

அப்பா இருக்கும்போது சந்திரசேகரனுடன் இணைந்து செயற்பட்டார். அப்பா, ஐயா, சந்திரசேகரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும்போதே தனிவீட்டுத்திட்டம் மலையகத்துக்கு வந்தது. ஆனால், நாங்கள்தான் தனி வீடுகட்டினோம் என்று பொய்யுரைக்கின்றனர்.

சுமார் 30 ஆயிரத்துக்குள் மேல் வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் கூரைகள் எல்லாம் காற்றில் பறக்கவில்லை. தோட்டத்தில் வேலைசெய்தார் மட்டும்தான் வீடு என்பது அல்ல தோட்டத்தில் பிறந்திருந்தாலும் வீடு வழங்கப்படும் என்பதே எமது நோக்கம். ஏழு பேர்சஸ் என்பதற்குள் முடங்காமல் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டிருந்தோம். கிராமமொன்றை உருவாக்கி பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே எமது இலக்கு.

காங்கிரஸின் கதவு அடிமட்ட தொண்டர்களுக்காக திறந்தே உள்ளது. மீண்டும் வாருங்கள். தலைவரை பார்க்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் சிலர் சென்றனர். அவர்கள் வரலாம். ஆனால், முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கு இடமில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

‘ இ.தொ.காவுக்கு மீண்டுமொருமுறை அரசியல் பலத்தை தாருங்கள்’

” எமது தலைவர் இருக்கும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது. அவர் இல்லாத நிலையிலேயே இம்முறை தேர்தலை எதிர்கொள்கின்றோம். எனவே, இ.தொ.காவுக்கு மீண்டுமொருமுறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

” எங்களது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாத நிலையிலேயே இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலை சந்தித்துள்ளது. நாங்கள் எதிர்பாராத விதமாக தலைவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், எங்களுக்கெல்லாம் தெம்புதருவது போல் தம்பி ஜீவன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்துவதற்காக இளைஞர்களும், மக்களும் இன்று அலைகடலென அணிதிரண்டுள்ளனர். இன்னும் 50 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்த தேர்தல் போடவிருக்கின்றது. எனவே, இது மிகமுக்கிய தேர்தலாகும்.

எங்களின் தலைவரின் ஆளுமை மிகப்பெரியது. அதனை எவராலும் நிரப்பமுடியாது. அவரின் பேரம்பேசும் சக்தி பலமுடையது. அதனைவைத்துக்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது.

தொழில்வாய்ப்பு, இருப்பு என எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே உரிமைகளை வென்றுக்கொடுத்துள்ளது. ஆகவே, மீண்டுமொரு அரசியல் பலத்தை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

15 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு வழிகாட்டுகின்ற மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் இருப்பதால் இங்கிருந்து கூடுதல் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்லவேண்டும். தம்பி ஜீவன் தலைமையில் எமது உறுப்பினர்கள் ஐவரையும் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 14 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது.

148 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 11 பேர் உயிரிழந்தனர்.

1000 ரூபா கதை இனியும் வேண்டாம் -உழைப்புக்கேற்ற ஊதியமே வேண்டும்

வாக்கு வேட்டைக்காக தேர்தல் காலத்தில் மட்டும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசாமல், தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஆரம்பத்தி கத்தியால் நூறு தேயிலை செடிகளை கவ்வாத்து வெட்டியவர்கள் தற்போது இயந்திரத்தால் ஆயிரம் செடிகளை வெட்டுகின்றனர்.ஆரம்பத்தில் மருந்து கொள்கலனால் நூறு தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளித்தவர்கள் தற்போது ஆயிரம் தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளிக்கின்றனர்.

நாளுக்கு நாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் அளவு கூடிவிட்டது.ஆனால் சம்பளம் கூடவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரச்சனை இல்லை ஆயிரம் பிரச்சனைகள் வேலைக்கேற்ற ஊதியத்தை கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க நேரிடும்.

எனவே ஆயிரம் ரூபாயில் அரசியல் செய்வதை விடுத்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற முயற்சி செய்யுங்கள்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பார ஊர்தி விபத்து – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்றே, வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதனால், சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் உடனடியாக வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டனர்.

‘பிரேக்’ பிடிபடாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன், க.நிஷாந்தன்

‘யானை மிதித்தால் மொட்டு நசுங்கிவிடும்’ – ஆனந்தகுமார்

” எனக்கு எதிர்ப்பு அரசியல் பிடிக்காது. இந்த மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்யவேண்டும். எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவே காத்திருந்தேன்.

ஆனால், நான், போட்டியிடும் சின்னமான, யானையை இந்த மாவட்டத்திலிருக்கும் அக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த யானையின் பலம் அந்த அக்காவுக்கு தெரியாது என இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் எஸ். ஆனந்தகுமார் தெரிவித்தார்.

யானை மித்தால், மொட்டு நசுங்கிவிடும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விருப்புகின்றேன்.

இறக்குவானையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எஸ். ஆனந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்காது. ஐக்கிய தேசிய கட்சி, நடமாடும் பிணமாய் அலையும் இறந்தக் கட்சியாகும் என, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

பதவிக்காக யானை ஒருபோதும் சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார்.

ஐ.தே.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார திட்டத்தினால்தான், ஓரளவுக்கு நாடு நிமிர்ந்து நிற்கிறது. இல்லையேல், கொரோனாவின் தாக்கத்தில், ஒருவேளை உணவை உண்பதற்கு கூட வக்கில்லாது. பட்டியினால் செத்து மடிந்து வீதியோரங்களில் பல பிணங்கள் கிடந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு சமையலறைகளிலும் அடுப்பு எரிகிறது என்றால், அது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தயவால் என்றார்.

யானையின் பலம் யாருக்கும் தெரியாது. சீண்டிவிட்டால் அங்குசத்துக்கு கூட அடங்காது. இரத்தினபுரியில் காட்டு யானைகள் இல்லை. அதனால், யானையின் பலம் எல்லோருக்கும் தெரியாது. இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, குறிப்பாக, தோட்டத்தொழிலாளர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்துக்குச் சென்று, எம்மக்களை மறந்தவர்களே இங்கிருக்கின்றனர்.

எங்களுடைய மக்களுக்கு அவர்கள் மட்டுமல்ல. மலையகத்தில் பழம் தின்னும் கொட்டை போட்டதாகக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகள் கூட, இரத்தினபுரி மக்களை மறந்தே விட்டனர். இங்குவாழும் சிறுபான்மை மக்களின் மீது கையை வைத்து சீண்டும் போதெல்லாம். அதற்கெதிராக நாமே குரல் கொடுத்தோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் முடியுமானால் பெருமளவான வாக்குகளை பெற்று காட்டுமாறு பவித்ரா வன்னியாராட்ச்சிக்கு பகிரங்க சவால் விடுப்பதாகவும் எஸ்.ஆனந்தகுமார் குறிப்பிட்டார்

சங்கக்காரவை அரசாங்கம் குறிவைத்தது ஏன்?

எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடூங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இனவாதம் பேசி, மதவாதத்தை தூண்டி குறுக்குவழியிலாவது ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருபுறத்தில் பாடுபடும் அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை வேட்டையாடிவருகின்றது. நாம் எதையும் செய்வோம். அதற்கு எதிராக வாய் திறந்தால் கழுத்துக்கு கத்திவரும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சியின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. சங்கா, மஹேல போன்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுகூட இதன்ஓர் அங்கமாகும்.

இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்ந்த சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தம்மால் முடிந்த சமுகசேவைகளை செய்துவருகின்றனர். நாட்டுக்கு எதிரான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு தெரிவாவதற்கான அனைத்து தகுதிகளும் சங்கக்காரவுக்கு இருக்கின்றது. எனவே, சங்கக்காரவின் பெயரை எவரும் பரிந்துரைக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சித்திட்டமா இந்த விசாரணை என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தகவல்களை இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு விளையாட்டு சட்டத்தின் பிரகாரம், ஆட்டநிர்ணய சதி தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டால் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவலை வெளியிட்ட அரசியல்வாதிக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? ” – என்றார்.

‘1000 ரூபாவை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்’

சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது,“பூச்சாண்டி” காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து முன்வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல – என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

வேட்பாளர் வடிவேல் சுரேஸ், பதுளையில் தமது வாசஸ்தலத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

“அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதார செலவு உயர்வு ஆகியவற்றை ஈடுசெய்ய இவ் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினால் முடியாது. இது குறித்து, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாக தெளிவுப்படுத்தியுள்ளேன்.

தேர்தலுக்குப் பின் சஜித் பிரேமதாச பிரதமரானதும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கமையவும், அவர் ஏற்கனவே கூறிய 1500 ரூபா  என்ற சம்பள உயர்விற்கு அப்பால் நியாயமான சம்பள உயர்வை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்.” – என்றார்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

0
பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை...