Home Blog Page 3562

சஜித் அணி இணைந்தால்கூட பதவிகள் வழங்கப்படாது – ஐ.தே.க.

பொதுத்தேர்தலின் பின்னர் சஜித் அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்தால்கூட அவர்களுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படாது என்று ரணில் அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கூட்டணியொன்றை உருவாக்குவதற்கே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியது. ஆனால், சஜித் தரப்பு கட்சியொன்றை உருவாக்கியது. அந்த கட்சியின் நிறம் நீலம். அதனை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தொகுதி அமைப்பாளர் பதவியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்கள்கூட நிரப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என சஜித் அணியினர் கூறிவருகின்றனர். 20 ரூபா கொடுத்து அங்கத்துவம் பெறலாம். ஆனால், அவர்களுக்கு எவ்வித பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் என எவ்வித பதவிகளும் வழங்கப்படாது.” – என்றார்.

50 ரூபாவைக்கூட வழங்காதவர்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுப்பது சரியா?

” இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களேதவிர, நல்லாட்சியின்கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

 ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தலவாக்கலையில் நடைபெற்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆனால், அவர்களின் ஆட்சியில் 50 ரூபாவைக்கூட  தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை இங்கு கட்டினார்கள். மற்றும்படி எம் மக்களுக்காக எதனையும் நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் செய்யவில்லை.இப்படி நடந்தும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளருக்கே வாக்குகளை அள்ளி, அள்ளி கொடுத்தீர்கள்.

எனவே, இம்முறையாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாக மாறுமாறு மலையக மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். என்னைப்போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிகளால் நிச்சயம் சேவையாற்றமுடியும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.

‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியானது மலையக மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக சேவையாற்றியுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எமது மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தல் காலத்தில் வந்து விளையாட்டு பொருட்களை வழங்குபவர்களுக்கும், எங்கள் அப்பா செய்யாதவற்றை நான் செய்வேன் எனக் கூறுபவர்களுக்கும் வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்கவேண்டும்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானும், ராதா அண்ணனுமே அமைச்சர்களாவோம். கடந்த நான்கரை வருடங்களில் நாம் இருவரும் மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவைகளை செய்துள்ளோம். அவ்வாறு செய்துவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளோம்.

எப்படிதான் சேவை செய்திருந்தாலும் நான் கட்டிய வீட்டை குருவிகூட என விமர்சிக்கின்றனர். நான் குருவிகூடாவது கட்டிக்கொடுத்தேன். அவர்கள் அதையாவது செய்தார்களா? ” – எனவும் திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நேர்மை அரசியலா?

” நம்மவர்கள்தான் நம்மை ஆள வேண்டும். எனவே, கொழும்பில் இருந்தும், கண்டியில் இருந்தும் வருபவர்கள் தீபாவளி காலத்தில் வியாபாரம் செய்ய வருவது போல் வருவார்கள். சீசன் முடிவடைந்ததும் சென்றுவிடுவார்கள். இவர்களை நம்பக்கூடாது.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பிலிப்குமார் தெரிவித்தார்.

”  மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நீதி, நேர்மை மற்றும் வெளிப்படைதன்மை மிக்க அரசியலா என்பது குறித்து சிந்தித்தே மக்கள் முடிவெடுக்கவேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

113 நாட்களுக்கு பின்னர் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறப்பு

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (06.07.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஸ்தம்பிதமடைந்திருந்த மாணவர்களின் கல்வி நடவடிக்ககைள் 113 நாட்களுக்கு பின்னர் இன்று (06.07.2020) ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், மாணவர்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஆசிரியர்களினால் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
க.கிசாந்தன்

‘சஜித்தை பிரதமராக்குவதே எமது இலக்கு’

சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

” பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பையும், கலை – கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  அப்படியானால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

மன்னாரில் மாயமான மர்ம நபர்: புறமுதுகில் பொதியுடன் தேவாயலத்திற்கு வந்ததால் சர்ச்சை : மன்னாரில் தேடுதல்

மன்னாரில் பேசாலை பகுதியில் பொதியொன்றுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் மாயமானதால் அந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வெற்றிநாயகி தேவாலயத்திற்கு நபர் ஒருவர் சனிக்கிழமை மாலை வந்துள்ளார். இவர் பின்முதுகில் பையுடன் காணப்பட்டுள்ளார். இவரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எனினும், அதற்கு மழுப்பலாக பதில் கூறிய நிலையில், இந்த நபர் குறித்து அருட்தந்தைக்கு அங்கிருந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே குறித்த நபர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அருட்தந்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார். பொலிசார் குறித்த பிரதேசத்தில் விசாரித்தும், தேடுதல் நடத்தியும் வருகின்றனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், குறித்த நபர் எங்கு மாயமானார் என்பது குறித்து உரிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என மன்னார் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் பேசாலை பிரதேசத்திற்கு வந்து, பங்குத்தந்தையுடன் விடயங்களை ஆராய்ந்து சென்றுள்ளனர்.

அத்துடன். குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  • ஹஸ்மத்

 

‘கொரோனா’ – உலகளவில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 419 உயர்ந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. உலக முழுவதும் உக்கிர தாண்டவ ஆடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,435,299
ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534,519 ஆக கூடியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,473,428 ஆக உள்ளது.

‘இரத்தினபுரி மாவட்டத்தை புறக்கணித்த மலையக தலைமைகள்’

மலையகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெளியில் தமது சேவைகளை வழங்கிய போதிலும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு இதுவரை எந்தவொரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் இரத்தினபுரி – புதிய நகர் பகுதியில் இன்று (5) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையக மக்களுக்கான தலைவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாமையே இந்த பிரச்சினைக்கான காரணம் எனவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த தலைவர்களின் பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அவர்களினால் கூட இந்த மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மலையக தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கே அனைத்து உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை வழங்கி வருகின்றமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கவனிப்பாரற்று காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தினை முன்னேற்றமடைய செய்ய, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தலைமைத்துவமொன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்வது தற்போதைய நிலையில் அத்தியாவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.

இதுவரை பின்தள்ளப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இனிவரும் காலங்களில் தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து இளைஞர் சக்தியும் ஜீவனுடன் சங்கமம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்காக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்களும் அவருக்கு பேராதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் ஜீவனுக்கான ஆதரவு அலை கோலோச்சியுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பல தரப்பினரும் நேசக்கரம் நீட்டிவருகின்றனர். சர்வமத பிரதிநிதிகள் நேற்று ஆதரவு வழங்கிய நிலையில் இன்று பல இளைஞர்கள் ஜீவனுக்காக அணி திரண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் உள்ள இளைஞர், யுவதிகள், இளைஞர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை பலப்படுத்துவதற்கு ஓரணியில் திரண்டது வரவேற்கத்தக்க விடயம் என்றும், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கு வழிவகுக்கும் என்றும்  சிரேஷ்ட அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜீவனுக்கான ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்ட சகோதர இனங்களைச்சேர்ந்த இளைஞர்கள்,

” தேர்தல் காலங்களில் பலர் இனவாதம் பேசி, இளைஞர்களை பிரித்தாள்வதற்கு முயற்சிக்கின்றனர். இம்முறையில் பல அரசியல்வாதிகளின் உரைகள் அவ்வாறே அமைந்துள்ளன. ஆனால், அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவ்வாறு அல்ல. இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதநேயத்தை நேசித்தவர். நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சேவைகளை வழங்கியவர். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய சர்வமதத் தலைவர்கள், இதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்.

ஜீவன் தொண்டமானும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி செல்லவே முயற்சிக்கின்றார். அவரிடமும் பிரிவினைவாதம் கிடையாது. இப்படியொரு இளைஞர்தான் தலைமை வகிக்கவேண்டும். அப்போதுதான் இளைஞர் சக்திகளை ஓரணியில் திரட்ட முடியும். அதனை உணர்ந்துள்ளதாலேயே ஜீவனுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்க சுயேட்சையாகவே முன்வந்துள்ளோம்.

மலையகத்தில் நாமும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றம் என்பதற்குள் அனைவரும், அனைத்தும்பெற்று சமமாக வாழும் நிலை உருவாகவேண்டும் என்ற விடயமும் உள்ளடங்கவேண்டும். அதனை ஜீவன் செய்வார் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது.” – என்றனர்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

0
பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை...