Home Blog Page 3644

பாலித்த தெவரப்பெருமவுடன் சண். பிரபா சங்கமம்!

களுத்துறை மாவட்ட சிறுபாண்மை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளையும் பங்களிப்புகளையும்  வழங்கிவரும் களுத்துறை மாவட்ட வெற்றி வேட்பாளர் பாலித்த தெவரப்பெருமவுடன் கைகோர்த்தார் சண்.பிரபா.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தான் உதவி புரிவதாக பாலித்த தெவரப்பெரும தன்னிடம் உறுதியளிததுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.

நேற்று (04/07) அவரது காரியாலயத்திற்குச் சென்று சந்தித்த வேளையிலேயே தெவரப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபாண்மை மக்களிள் வாக்குகள் மாத்திரம் அலல பெரும்பாண்மை மக்களின் வாக்குகளையும் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவுவேன்.

இத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்திற்கு சிறுபாண்மை பிரதிநிதித்துவத்தை வெற்றிக் கொள்வதற்கு  நிச்சயமாக  உதவுவேன் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தனக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொதுத்தேர்தலில் இருந்து அவர் விலகவேண்டும் – என்று பொதுத்தேர்தலில் சுயேட்சையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நான் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். நான் பணம் வாங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறு மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

அவ்வாறு நிரூபித்தால் பொதுத்தேர்தலில் இருந்து விலகிக்கொள்கின்றேன். இல்லையேல் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து நீங்கள் விலகவேண்டும் என்பதை சவாலாக இன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

எனது மகனுக்கு கட்சியில் பதவி இல்லை – திகா திட்டவட்டம்

“தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராகவேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்.” – என்று சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

வீடு வேண்டும் என்ற எல்லோருடைய கோரிக்கையையும் ஒரே நாளில் நிறைவேற்றிவிடமுடியாது. எல்லோருக்கும் வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டோம் எனவும் நான் கூறவில்லை. எமக்கு கிடைத்த நான்கரை வருடங்களில் பல வீட்டுத்திட்டங்கள் முன்னெடுத்தோம். இதனால்தான் தனிவீடு தொடர்பான கருத்தாடல்கள்கூட இன்று இடம்பெற்றுவருகின்றன.
எனக்கு பின்னால் எனது மகன் அரசியலுக்கு வரப்போவதில்லை. ஏனெனில் அவருக்கு உங்களைப் பற்றி தெரியாது. சொகுசாக வாழ்ந்தவர். ஆனால் நான் அப்படியானவன் அல்லன். உங்களது கஷ்டங்கள் அறிந்தவன். அவற்றை நானும் அனுபவித்துள்ளேன்.  எனவே, என்னுடைய மகனை கொண்டுவந்து தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவராக்கமாட்டேன். இந்த சங்கத்துக்கு தலைவராகக்கூடிய தகைமை – உரிமை உங்களின் பிள்ளைகளுக்கே இருக்கின்றது. தேர்தலுக்காக இதனை நான் பேசவில்லை. உண்மையாகவே சொல்கின்றேன்.
மலையக இளைஞர்களே, நுவரெலியா மாவட்டத்தில் எமது இருப்புக்கு ஆபத்து வரப்போகின்றது. ஒரு கட்சியில் எட்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகளை சிதறடிக்க மேலும் பலர் போட்டியிடுகின்றனர். எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைக்கமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தட்டிக்கேட்கமுடியாத சூழ்நிலை ஏற்படும்.
நாம் என்றும் மக்களோடு மக்களாகவே இருப்போம். ஓடி ஒளியமாட்டோம். எமது கைகளுக்கு மீண்டும் அதிகாரம் வந்தால் அபிவிருத்தியில் புரட்சியை ஏற்படுத்துவோம்.
அண்ணன் கிரிக்கெட் விளையாடினார் என்பதற்காக தம்பியை இங்கு களமிறக்கி கோடி கணக்கில் செலவுகளை செய்து, பெட், போல்களை வழங்கி வாக்குகளை உடைத்து, எமது பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
அதேவேளை, போர்காலத்தில் கொழும்பில் இருந்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடியவர்தான் எமது தலைவர் மனோ கணேசன். அவரை கட்டாயம் கொழும்பில் வெற்றிபெற செய்யவேண்டும். அதற்கேற்ற வகையில் நமது தமிழ் மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.

600 கோடி ரூபா அபிவிருத்தி – ஊவாவில் செந்தில்தான் ஹீரோ

பதவி விலக அரவிந்தகுமார் தயாரா? சேவைப்பட்டியலை வெளியிட்டு சிவலிங்கம் சவால் விடுப்பு!
ஊவாவில் வரலாறுகாணாத அபிவிருத்தியை முன்னெடுத்த ஆளுமைமிக்க தலைவரே செந்தில் தொண்டமான்!

– அபிவிருதிகளை ஆவணங்களுடன் பட்டியலிட தயார் : வாபஸ் பெற அரவிந்தகுமார் தயாரா என சிவலிங்கம் பகிரங்க சவால் விடுப்பு –

ஊவாமாகாண அரசியல் வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளையில் எந்தவொரு தமிழ் அரசியல் வாதியும் செய்யாத பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளார். 6000ம் மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புறங்களின் பாதை அபிவிருத்திக்கு மாத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளார் என ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊவாவில் கிட்டத்தட்ட 134 கிலோ மீற்றர் தோட்டப்புற பாதை கார்ப்ட் இடப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் ஊவாவில் உள்ள அனைத்து தோட்டங்களுக்கும் காபட் பாதை போடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்மைவிட அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ள எவரும் அதனை பட்டியலிட தயார் என்றால் தாம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற தயாரென கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சிவலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊவாவில் செந்தில் தொண்டமானின் அரசியல் பயணம் ஆரம்பமான நாள் முதல் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தோட்டப்புறங்களை நோக்கிக் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்திராத அபிவிருத்திட்டங்களை செந்தில் தொண்டமான் செய்துள்ளார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தோட்ட உட்கட்டமைப்பு, கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தியை செய்துள்ள ஒரே ஆளுமைமிக்க தலைவர் செந்தில் தொண்டமான்தான்.

ஏ.டி.பி மூலம் 4500 மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புற பாதைகளை கார்ப்ட் செய்வதற்காக 36 தடவைகளுக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொடுத்துள்ளார். அத்தோடு மாகாண சபை மூலமாக 1700 மில்லியனுக்கும் அதிகமான நிதியையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 7000ம் மில்லியன் வரையான நிதியை தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரம் ஒரு மாகாண அமைச்சராக இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதுவரை மலையகத்தில் தமிழ் அமைச்சராகவிருந்த எவரும் செய்யாத அபிவிருத்திகளை செந்தில் தொண்டமான் ஊவாவில் செய்துள்ளதுடன், அவர்களைவிட குறைந்தது ஒரு ரூபாவேனும் அதிகமாக அபிவிருத்தியை செய்திருப்பார்.

தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரமே இந்தளவு நிதியை பெற்றுக்கொடுள்ள அவர் தோட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய அபிவிருத்திக்கும் பாரிய நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரின் அபிவிருத்திகளை ஓர் அறிக்கையில் பட்டியலிட்டுவிட முடியாது.

செந்தில் தொண்டமான் செய்துள்ள சேவையில் துளியளவும் செய்யாத அரவிந்தகுமார் வெட்டிப் பேச்சு பேசிவருகின்றனர். செந்தில் தொண்டமானின் சேவைகளை பட்டியலிட நாம் தயாராகவுள்ளோம். அரவிந்தகுமார் வாபஸ் பெறுவதற்கு தயாரா?. ஊவாவில் செந்தில் தொண்டமான்தான் ஹீரோ மற்றவர்கள் எல்லாம் ஷீரோ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியவில் சரித்திரம் படைத்து கண்டியை கைப்பற்றுவோம் – பாரத்

நாவலப்பிட்டிய தொகுதியில் சரித்திரம் படைத்து கண்டி மாவட்டத்திலும் அமோக வெற்றி பெறுவோம். மஹிந்தானந்த அளுத்கமகே முதலிடம் பிடிப்பார். அவருடன் உங்கள் ஆதரவோடு என்னையும் உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் அழைத்துச்செல்வார். எனவே, தமிழ் பேசும் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது அரசியல் வாழ்வில் 30 வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டி வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இதன்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கண்டி மாவட்டத்துக்கும் எனக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நான் பிறந்ததுகூட நாவலப்பிட்டிய வைத்தியசாலையில்தான். இன்று அந்த நாவலப்பிட்டிய நகருக்கு வேட்பாளராக வந்துள்ளேன். எனக்கு ஆதரவு வழங்குமாறு மஹிந்தானந்த அளுத்கமகேயும் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கண்டி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே, தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதாலேயே எங்கள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். தற்போது எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றேன்.

கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். இளம் வேட்பாளராகவும் இருக்கின்றேன். இந்நிலையில் இந்த சின்னபையன் என்ன செய்யப்போகின்றார் என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், எனது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் என்னை உற்சாகப்படுத்தினார். இன்று மஹிந்தானந்த அளுத்கமகேயும் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.

நான் பல்கலைக்கழகத்துக்கு சென்றுவரும்போது நாளுக்கு நாள் நாவலப்பிட்டிய பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். பல அபிவிருத்தி திட்டங்களை மஹிந்தானந்த முன்னெடுத்திருப்பார். ஒரு அரசியல்வாதியால் இப்படியும் செய்யமுடியுமா என்ற ஆர்வம் என்னுள் வந்தது. அரசியலுக்கு வருவதற்கு இதுவுமொரு காரணமாகும். 4 விடயங்களை முன்னிலைப்படுத்தியே எனது பிரச்சாரம் அமையும். நிலைபேண்தகு அபிவிருத்தியே இலக்காக இருக்கின்றது.

மஹிந்தானந்தவின் அரசியல் கோட்டைதான் நாவலப்பிட்டிய தொகுதி. அந்த தொகுதியில் எனக்கு விருப்பு வாக்கை வழங்குமாறுகோரி தனது உயரிய தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சிறந்த அரசியல் தலைவர். நல்லிணக்கத்தின் அடையாளம். நாவலப்பிட்டியவில் சரித்திரம் படைத்து கண்டியிலும் பெரு வெற்றியை பெறுவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

பாரத் அருள்சாமிக்கு ஆதரவு வழங்கவும் – மஹிந்தானந்த கோரிக்கை

பாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்டத்தில் வாழும் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது அரசியல் வாழ்வில் 30 வருடத்தை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டி வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட தமிழ் வேட்பாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார். இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில் எனக்கு வாக்களிக்கும், வாக்காளர்கள் இரண்டாவது விருப்பு வாக்கை பாரத் அருள்சாமிக்கி வழங்கி அவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நான் சரியில்லையென உங்களுக்கு தோன்றினால் பாரத்துக்கு மட்டுமாவது வாக்களியுங்கள்.

கண்டி மாவட்டத்திலிருந்து தமிழ் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்லவேண்டும். பாரத்தின் தந்தையான அமரர் அருள்சாமி கண்டி மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனை கொண்டுவந்துள்ளோம். அவரை நிச்சயம் வெற்றிபெறவைக்கவேண்டும்.. நாவலப்பிட்டிய தொகுதியில் அவருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்படவேண்டும்.” – என்றார்.

சாணக்கியம் – வீரம் கலந்த ஜீவனின் வெற்றிப்பயணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அரசியல் அணுகுமுறையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியமும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரமும் கலந்திருப்பதாக மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி அவற்றுக்கு தீர்வுகாண்பதற்காக முழுவீச்சுடன் செயற்பட்டுவரும் ஜீவன் தொண்டமானின் அரசியல் இராஜதந்திரம் பாராட்டத்தக்கது  எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மொட்டு சின்னத்தின்கீழ் இலக்கம் 3இல் போட்டியிடும் ஜீவன் தொண்டமானுக்கு நாளுக்கு நாள் பேராதரவு வலுத்துவருகின்றது.பல தரப்பினரும் அவரை சந்தித்து ஆதரவு வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை சந்தித்த மலையக புத்திஜீவிகள் குழுவொன்று, அவருக்கு முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்ததுடன், ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எதிர்காலத்திலும் ஒத்துழைப்பு நல்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது மலையகத் தமிழர்களின் தாய்க்கட்சியாகும் என்பதுடன் எமது சமுதாயத்தின் அடையாளமும்கூட. குறிப்பாக இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர், பல தடைகளுக்கு மத்தியிலும் அந்த தாய்க்கட்சியை அமரர் ஆறுமுகன் தொண்டமான் பாதுகாத்தார். சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி கட்சியைப் பலப்படுத்தினார்.

அவரின் மறைவின் பின்னர் இ.தொ.கா. பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றே பலரும் கருதினர்.ஆனால், ஜீவன் தொண்டமானின் தலைமையில் காங்கிரஸ் என்ற குடும்பம் நிலைகுலையாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளராக இருந்து ஜீவன் வழங்கும் தலைமைத்துவம் இ.தொ.காவை உச்சத்துக்கு கொண்டுசெல்லும் என்பது உறுதி. அதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.

1994 இல் பொதுச்செயலாளராகவே அமரர் ஆறுமுகன் தொண்டமான் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை பதிவுசெய்தார். இம்முறை ஜீவனும் பொதுத்செயலாளராக கன்னி பொதுத்தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் மலையக புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டனர்.

நாமே வெற்றிபெறுவோம் – மொட்டு கருகிவிடும்!

கண்டி மாவட்டத்தில்  மட்டுமல்ல  நாட்டின் பல பாகங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கான  வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட்  5 ஆம் திகதிக்கு பின்னர்   கருகிவிடும் என்பது உறுதி .” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில்,  கண்டி மாவட்டத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் வேட்பாளர் வேலுகுமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இதன்படி கண்டி பாத்ததும்பர பகுதியில் நேற்று (02.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது. ஆனால், கடந்த 6 மாதங்களில்  இவர்கள் செய்தது என்ன? கொரோனா விவகாரத்தில் சற்று காத்திரமாக செயற்பட்டிருந்தாலும் ஏனைய விடயங்களில் தோல்விகண்டுள்ளனர். அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது.

குறிப்பாக சிவில் நிர்வாகத்துக்கு பதிலாக இராணுவமயப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாது செய்யப்படும் எனவும் அறிவிப்பு விடுக்கின்றனர். தப்பிதவறியேனும் ராஜபக்ச தரப்பு ஆட்சிக்குவந்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். எனவே, நாட்டில் எதிர்காலத்தையும் ஜனநாயகத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுக்காக அடித்துக்கொள்கின்றனர்.10 பேரை கூட்டிவந்து ஆயிரம் பேர் இணைந்துவிட்டனர் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன. அவர்கள் விருப்பு வாக்குளுக்காக மோதிக்கொண்டாலும் மக்கள் சக்தி எம்பக்கமே. எனவே, சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும்.” – என்றார்.

சஜித் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – திகா சூளுரை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்ட பின்னர், எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மக்களிடம் நாம் கருத்து கேட்டோம். அப்போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு அவர்கள் குறிப்பிட்டனர். இதற்கமையவே நாம் முடிவெடுத்தோம்.

பொதுத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாம் எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு கேட்கின்றோம். ஆனால், எம்மை விமர்சித்துதான் எதிர்தரப்பு வாக்கு கேட்கின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த தொகையை கம்பனிகள் வழங்காது. எனவேதான் தோட்டங்களை எமது மக்களுக்கு பிரித்து வழங்குமாறு கேட்டுவருகின்றோம்.” – என்றார்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியதும், கூடாததும்

சீனாவின் வுஹானில் தொடங்கிய நோயான கொவிட்-19 என்றால் என்ன?

COVID-19 என்பது இதற்கு முன்பதாக நாம் தெரிந்திராத கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். ஏனைய கொரோனா வைரஸ்களைப் போலவே, இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்துள்ளது. இது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை பாதிக்கும் புதிய நோயாகும்.

இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகள் யாவை?

இந்த வைரஸ் நிமோனியாவை ஏற்படுத்தும். கொரோனாவால் நோய்வாய்ப்பட்டவர்கள் இருமல், காய்ச்சல், சுவாச சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். நோய் தீவிரமாகும் நிலையில் உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம். இது வைரஸ் நிமோனியா என்பதால், அன்டிபயோடிக்ஸ் (antibiotics) பயனளிக்காது. காய்ச்சலுக்கு எதிராக நம்மிடம் உள்ள அன்டி-வைரல் மருந்துகள் இயங்காது. இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. கொரோனாவால் இறந்தவர்களில் பலர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

எனக்கு இருமல் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

இருமல் அல்லது அதிக உடல் வெப்பநிலை உள்ள எவரும் 14 நாட்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உட்பட பிறரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது மருத்துவ ஆலோசனையாகும். இது அனைவருக்கும் பொருந்தும். உடல்நிலை மோசமானால், அல்லது உங்கள் அறிகுறிகள் ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் 117 ஐ அழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறதா?

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஜனவரி மாதத்தில் இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவுவதை உறுதிப்படுத்தியது. இப்போது உலகம் முழுவதும் மனித பரவலுக்குள்ளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இது ஒரு புதிய நோய் என்பதால், கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு பரவுகிறது என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இந்த நோய் மூச்சினால் பரவக் கூடியதாக் கருதப்படுகிறது. எச்சில், இருமல் துளி, தொற்றுகளை ஏற்படுத்தும் துணி, பாத்திரங்கள், தளபாடங்களினால் பரவக்கூடியதாக் கூறப்படுகிறது.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

மார்ச் 15 ஆம் திகதி வரை, 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 156,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 5,800 இற்கும் மேற்பட்ட இறப்புகள் நேர்ந்துள்ளன. அவற்றில் 3,000 இற்கும் மேற்பட்டவை சீனாவில் நிகழ்ந்துள்ளன. கொரோனா வைரஸிலிருந்து 73,000 இற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

இது சாதாரண காய்ச்சலை விட ஏன் மோசமானது? வல்லுநர்கள் எவ்வளவு கவலைப்படுகிறார்கள்?

புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று இன்னும் தெரியவில்லை, மேலும் கூடுதல் தகவல்கள் வரும் வரை தெரியாது. பருவகால காய்ச்சல்கள் பொதுவாக 1% இற்கும் குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதுடன், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 இறப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சார்ஸின் இறப்பு விகிதம் 10% க்கும் அதிகமாக இருந்தது.

அறியப்படாத மற்றொரு முக்கிய விடயம், கொரோனா வைரஸ் எவ்வளவு தொற்றும் தன்மையுடையது என்பதாகும். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஏனைய காய்ச்சல்களைப் போலன்றி, புதிய கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை. அதாவது பாதிக்கப்படக்கூடியவர்களான வயதானவர்கள் அல்லது ஏற்கனவே சுவாச அல்லது நோயெதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்கள் – தங்களைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்.

வேறு கொரோனா வைரஸ்கள் இருந்ததா?

Severe acute respiratory syndrome (சார்ஸ்) மற்றும் Middle Eastern respiratory syndrome (மெர்ஸ்) இரண்டும் விலங்குகளிடமிருந்து வந்த கொரோனா வைரஸ்களால் ஏற்படுகின்றன. 2002 ஆம் ஆண்டில், சார்ஸ் கிட்டத்தட்ட 37 நாடுகளுக்குத் தடையின்றி பரவி, உலகளாவிய பீதியை ஏற்படுத்தியது, 8,000 இற்கும் அதிகமான மக்களைப் பாதித்ததுடன், 750 இற்கும் மேற்பட்டோரைக் கொன்றது. மெர்ஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு எளிதில் கடத்தப்படுவதாகத் தோன்றுகிறது, அதிக மரணம் கொண்டது, பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேரில் 35% பேர் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பீடிப்பதை அல்லது பரவுவதைத் தவிர்ப்பது எப்படி?

  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவவும் – இதை குறைந்தது 20 விநாடிகள் செய்யுங்கள்
  • நீங்கள் வீட்டிற்கு வரும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது எப்போதும் கைகளைக் கழுவுங்கள்
  • சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சானிடிசர் ஜெல் (hand sanitiser gel) பயன்படுத்தவும்
  • உங்கள் கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடாதீர்கள்
  • நீங்கள் இருமும் போதோ தும்மும் போதோ உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு திசுவால் (tissue) மூடிக்கொள்ளவும்.
  • பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பின்னர் உங்கள் கைகளை கழுவவும்
  • முகமூடி அணிந்துகொள்ளவும்.
  • உடல்நிலை சரியில்லாதவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க முயற்சிக்கவும்

கொரோனா வைரஸுக்கு சிகிச்சை?

  • கொரோனா வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) வைரஸ்களுக்கு எதிராக செயல்படாததால், அவை கொரோவை தடுக்க உதவாது.
  • இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது.
  • நோயெதிர்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் குணமடையும் வரை மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும்.

வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருத்தலுக்கான உதவிக் குறிப்புக்கள்?

  • ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (3 அடிகள்) விலகியிருக்க முயற்சி செய்யுங்கள்
  • முடிந்தால் தனியாக தூங்குங்கள்
  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவுங்கள்
  • ஏராளமான தண்ணீர், நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவதொன்று உங்களுக்கு உள்ளதா?

  • அதிக வெப்பநிலை – உங்கள் மார்பில் அல்லது பின்புறத்தில் தொடும்போது நீங்கள் சூடாக உணர்கிறீர்கள்
  • ஒரு புதிய தொடர்ச்சியான இருமல் – இதன் பொருள் நீங்கள் மீண்டும் மீண்டும் இருமுகிறீர்கள்

உங்கள் வழமையான அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிடும் அளவுக்கு நீங்கள் மோசமாக இருக்கிறீர்களா?

(டிவி பார்ப்பது, தொலைபேசி பயன்படுத்துவது, படிப்பது, படுக்கையில் இருந்து எழுவது போன்ற வழக்கமான எதையும் செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதா)

ஆம் எனில், 117 ஐ அழைத்து உடனடியாக உதவியைப் பெறுங்கள். கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாகக் கூறுங்கள். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

உதவி கிடைக்கும்வரை ஏனையோரிடமிருந்து விலகி இருங்கள்.

உங்கள் நிலமை மோசமாக இல்லை எனில், நீங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். குறைந்தது அடுத்த 7 நாட்களுக்கு ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (சுமார் 3 அடிகள்) விலகி இருங்கள்.

  • வீட்டியல் நீங்கள் செய்ய வேண்டியவை?
  • ஓய்வெடுத்து ஏராளமான நீராகாரம் அருந்தவும்.
  • இருமல் அல்லது தும்மும்போது வாயை ஒரு திசுவால் மூடிக்கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும்.
  • உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்புடன் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும்
  • உங்கள் அறிகுறிகளை வீட்டிலேயே சமாளிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அல்லது உங்கள் நிலை மோசமடைகிறது என்றால் 117 இற்கு அழைத்து அவசர உதவியை பெற்றுக்கொள்ளவும்.

நீங்கள் வீட்டில் தங்குவதை எப்போது முடிக்க வேண்டும்?

உங்கள் அறிகுறிகள் தொடங்கிய 7 நாட்கள் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் நன்றாக உணர்ந்தால், அதிக வெப்பநிலை இல்லை என்றால், நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

உங்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனில், நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இருமல் இல்லை, அதிக உடல் வெப்பநிலை இல்லை. உங்களுக்கு கொரோனா வைரஸின் (COVID-19) அறிகுறிகள் தென்படவில்லை.

  • தொகுப்பு – நிருஷா கனகசபை

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...