Home Blog Page 3947

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 7 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். 670 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

#lka #srilanka #kuruvinews #sritamil #COVID19SL #COVID19LK #COVID19

‘இருப்பை தக்கவைக்க முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்’

சிறுபான்மையின மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதித்தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தோம். எனினும், துரதிஷ்டவசமாக அவர் தோல்வியடைந்துவிட்டார். பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்டதால் தெற்கு மக்கள் மொட்டு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்துஜனாதிபதியாக்கினர். பாதுகாப்பை முன்னிலைப்படுத்திதான் கொட்டகலைக்கு இராணுவம் வந்துள்ளதோ என்னவோ தெரியவில்லை.
மிகவும் முக்கியமான தேர்தல். எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். சஜித் பிரேமதாச தலைமையிலான அணிக்கு வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ளகூடியதாக இருக்கும்.
கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, எமது சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கி, மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.ஐக்கிய தேசியக்கட்சிக்கும், எமக்குமிடையில் இன்று மோதல் இல்லை. ஆனால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும், மொட்டு கட்சி காரர்களுக்குமிடையில்தான் மோதல் ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ வைரஸ் பரவல் – அரசாங்கம்மீது மனோ குற்றச்சாட்டு!

“வெளிநாட்டு கதை வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், நோயாளர் தொகை 3,000 க்குள் நிற்கிறது. ஆனால்,  நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்து  3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம்.

நீங்கள் மார்ச் 19, தேர்தல் வேட்பு இறுதி தினம் வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு, நாட்டை திறந்து வைத்தீர்கள். இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகிறது.”  என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

” ஜனாதிபதி,  மார்ச் 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைத்து, வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார்.  இதற்கு பதில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டு, முழு நாட்டையும் கொரோனாவை எதிர்த்து போராடும் தயார் நிலைக்கு கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.

பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் கூடினார்கள்.

அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள். வேட்பு மனு முடிந்த மறுநாளே, அதாவது 20ம் திகதியே நாட்டை “லொக்டவுன்” செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துக்கொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.

பெப்ரவரி 25ம் திகதியும், மார்ச் 5ம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார். அப்போது நாடு கொரோனா பற்றி அறிந்திருக்கவில்லை.

ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார். நாட்டை மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்க சொன்னார். நீங்கள் சபையில் அவரை கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதை  கணக்கில் எடுக்கவில்லை.

இன்று கொரோனா ஒரு சுகாதார பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டு பொருளாதாரத்தையும், நாட்டு பொருளாதாரத்தையும் நாசமாக்கி விட்டது. நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட வடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.  இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.

இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார துறையினரை குறை கூற வில்லை.  இந்நிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, போலிஸ் அதிகாரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு வேண்டிய தேவைகளை கூட நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றவில்லை. மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை “லொக் டவுன்” செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசாங்கம்தான். இதை வரலாறு பதிவு செய்யும்.” – என்றார்.

‘எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட சஜித்துக்கு கிடைக்காது’ – எஸ்.பி.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக்கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் 18.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தார்,

“குருணாகலை சம்பவம் தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனால், தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்று உடைக்கப்பட்டிருக்குமானால் அது தவறு

ஐக்கிய தேசியக்கட்சி புதுவழியை நோக்கி பயணிக்க முயற்சித்தாலும் அதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. சஜித்துடன் 80 வீதமானோரும், ரணில் பக்கம் 20 வீதமானோரும் உள்ளனர். எனவே, ஐக்கிய தேசியக்கட்சியால் மீண்டெழமுடியாது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பெறும் ஆசனங்களைவிட, சஜித் அணி குறைவாகவே பெறும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைகூட பெறமுடியாமல் போகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன’ இணைந்துகொண்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வதைகொடுத்தனர். அப்படியானவர்கள் இன்று எம்பக்கம் வந்துள்ளனர். இதனால்தான் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.” -என்றார்.

க.கிசாந்தன்

நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7 – வேட்பாளரும், NUW இளைஞர் அணித் தலைவருமான பாலகிருஸ்ணன் சிவநேசன் தடுப்புக் காவலில்

தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7, பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட வியாபாரத்திற்காக ஒருவரிடமிருந்து பணக் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசித் தீர்த்துக் கொள்வதற்காக அண்மையில் காசல்ரீ என்ற இடத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, எதிர்தரப்பின் வாகன சாரதியொருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை மையமாக வைத்தே பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் ரெிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது கத்தியுடன் வந்ததாகவும், சிவநேசன் தரப்பினர் கற்களைக் கொண்டு தாக்கியதாகவும் குறித்த சாரதி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தற்கு முன்னதாக சிவநேசனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை எனவும், காயமடைந்த நபர் குடிபோதையில் விழுந்தே காயமடைந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், சிவநேசன் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலகிருஸ்ணன் சிவநேசன் தேசிய தொழிலாளர் சங்கத்தின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தொழிலாளர் சங்கத்தின் பிரதான வேட்பாளர்களான திகாம்பரம், உதயா, இராதாகிருஸ்ணன் ஆகியோரை ஆதரித்து அண்மையில் இளைஞர்கள் கூட்டமொன்றையும் அட்டனில் சிவநேசன் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றிருந்தார்,

பாடசாலை விடுமுறை மேலும் ஒருவாரம் நீடிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களே அன்றைய தினம் வரவேண்டும். ஏனைய வகுப்புகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலைஞனுக்கு கைத்தட்டல் : கண்டி கலைஞர்களுக்கு சஞ்சாரியிடம் இருந்து அழைப்பு

“சஞ்சாரி”யின் கண்டி மாவட்டத்தின் கலைஞர்களுக்கான “சௌந்தரியம்” நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர்கள் எம்மை தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ஒரு கலைஞனுக்கு கைத்தட்டலைவிடப் பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்?” அதற்கு பாலமாக திகழ்வதே இந் நிகழ்வின் நோக்கமாகும்.

தொடர்புகளுக்கு சஞ்சாரி
https://www.facebook.com/sanjaari.21

பதுளை கருத்துக் கணிப்பில் செந்தில் முன்னிலையில் : சிங்கள ஊடகங்கள் செய்தி

பதுளை மாவட்டத்தில் நடந்த தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக அபிவிருத்தி மன்றம், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், தமிழ் யூனியன், நாளைய மலையகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலேயே, செந்தில் தொண்டமான் முன்னிலையில் உள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சமூக அபிவிருத்தி மன்றம், கந்தேகெதரை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 15 தோட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 81 சதவீதமளவில் முன்னிலையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், ஒன்றியத்திலுள்ள 400 உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும், அவர் 81 சதவீதம் முன்னிலையிலுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் யூனியன் அமைப்பானது, தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்ட 1,476 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவீதத்தில் செந்தில் முன்னிலையிலுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில், நாளைய மலையகம் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 79 சதவீதமும் தொலைபேசிச் சின்னம் 12 சதவீதமும், யானைச் சின்னம் 6 சதவீதமும், மக்கள் விடுதலை முன்னணி 2 சதவீதமும், சுயேச்சை குழுக்கள் 1 சதவீதமும் பெற்றுள்ளன.

மலையக சகவாழ்வு சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 81.6 சதவீதமளவில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலுள்ளார் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடந்துமுடிந்த தபால் மூல வாக்களிப்பில் அதிக வாக்குகளை செந்தில் தொண்டமான் பெற்றுள்ளதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக தமிழ் மிரர் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Lanka News 24 செய்தித் தளத்தில் வெளிவந்த செய்தி

ஆடம்பரய என்ற செய்தித் தளத்தில் வெளிவந்த செய்தி

 

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 11 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 11 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O23 ஆக அதிகரித்துள்ளது.

66  3பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக இருக்கின்றது.

‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து   ஆயிரத்து 930 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 84 லட்சத்து 78 ஆயிரத்து 837 பேர் குணமடைந்துள்ளனர். 51 லட்சத்து 23 ஆயிரத்து 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 897  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 99 ஆயிரத்து 552 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!

0
அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்  திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது...

அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடந்த சீன கப்பல்!

0
அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் நீரிணையின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய்...

ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!

0
ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட...