Home Blog Page 4034

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், ஆராத்யா

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு சரியாகி அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 11ம் தேதி மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அமிதாப் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அமிதாபின் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.

ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 17ம் தேதி இரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பது குறித்து அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு குணமாகி அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் அபிஷேக் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் இன்னும் முற்றிலும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

அமிதாப் வீட்டில் வேலை செய்து வரும் சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. முன்னதாக அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவர்களுக்கு சொந்தமான 4 பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது அந்த சீல் நீக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் வீடு திரும்பிய செய்தி அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்ததாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக்கும் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பத்தார் குணமடைந்து வீடு திரும்பும் வரை கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள் யாகம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 77 வயதாகும் அமிதாப் பச்சன் தைரியமாக இருப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பயப்படாமல் இருப்பது தான் முக்கியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான் அமிதாப் பச்சனின் தைரியம் ரசிகர்களை வியக்க வைக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் பச்சன் தன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற நேரத்தில் தன் தந்தையை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார் அமிதாப்.

அவர் அடிக்கடி இப்படி தன் உடல்நலம் பற்றி அப்டேட் கொடுப்பது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

– நன்றி சமயம்.கொம்

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் – சங்கா

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (ஹாங்காங்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் காலின் கிராவ்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

அதேவேளை இந்திய கிரிக்கெட் சபை தலைவரும், முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியை ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிரேமி சுமித் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில்,

‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன். நான் கங்குலியின் தீவிரமான ரசிகர். ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். புத்திசாலித்தனமானவர். கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு.

ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எந்த நிலையிலும் மாறக்கூடாது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன்.

எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.

‘இரத்தினபுரியில் அடிமை அரசியலில் இருந்து விடுபடுவோம்’

“நாம் காலம் காலமாக எமது பொன்னான வாக்குகளைபெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கே வழங்கி எமது உரிமைகளை இழந்து வந்திருக்கின்றோம். அதனால் எமக்கான தேவைகள் அவர்களுக்கு பெரிதாக தென்பட்டதில்லை. அதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம். அடிமை அரசியலில் இருந்து விடுப்பட்டு இனியாவது அபிவிருத்தியை நோக்கி நகரவேண்டும். அதற்கு நம்மிலிருந்து நமக்காக ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டும்.”
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்தார்.
இரத்தினப்புரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போது கலந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,
ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனுக்கே இன்னொரு தோட்டத் தொழிலாளியின் வாழ்கையை பற்றி சரியாக புரிந்துகொள்ள முடியும். எமது தோட்ட மக்கள் சொல்லனா துயரங்களை அனுபவிக்கின்றார்கள். நாம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம்.  அதனால் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இன்று நான் அரசியலுக்குள் வந்திருக்கின்றேன்.
நான் ஒரு பட்டதாரி  ஆசிரியர் ஆனாலும் அரசியல் அங்கீகாரம் என்ற ஒன்று அமைந்தால் மாத்திரமே எமது உரிமைகளையும் சலுகைகைளயும் எமது மக்களுக்கான தேவைகளையும்  தன்னால் முறையாக பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.
இரத்தினபுரி தமிழ் மக்களின் இன்னல்கள் தொடராமல் முற்று பெற வேண்டுமானால் தன்னை போல் லயத்திலே பிறந்து இறப்பர் தோட்டத்திலே கஷ்டப்பட்டு படித்து பட்டதாரியான தமிழர் ஒருவர் தம் மக்களுக்கு பிரதிநிதியாக அமைய வேண்டும் என்பதை சகலரும் உணரவேண்டும்.
தான் லயத்திலே பிறந்து படித்து ஒரு படி மேலாக பட்டதாரி ஆசிரியர் ஆனாலும் என்னை போன்று பட்டதாரிகள் உருவாகினாலும் நம் சமூகம் மேம்பட அது போதுமானது அல்ல இரத்தினபுரி மாவட்டதிலே தமிழ் பொறியியலாளர்,வைத்தியர்,வழக்கறிஞர், ஏன் ஒரு தமிழ் கிராம உத்தியோகஸ்த்தர்கூட இன்னும் உருவாகவில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலே 542 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன பொரலுவென்ன  50% தமிழர்கள், ஹபுகஸ்தண்ண 98%, தேணாகந்த 88%, பெட்டிகல 75%, மெதகந்த,மாதம்பை,ஹொரமுல்ல 60% , இறக்குவானை நகரம் 60% ,தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களிலும் பெரும்பாண்மை இனத்தவரே கிராம சேவகராக கடமையாற்றுகிறார்கள்.
இதற்கான அடிப்படை காரணங்கள் நம்மால் படிக்க முடியாமல் இல்லை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எமது மாவட்டத்தில் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
கற்றல் உபகரணங்கள் இல்லை, தமிழ் பாடசாலைகளில் பௌதீக குறைபாடு நிறையவே உள்ளது.
மாற்றத்தை முதலில் நாம் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எமது பிள்ளைகள் முறையாக படித்து உயர வளங்களை பாடசாலை களுக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.” – என்றார்.

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 வரை ஏற்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அதுதொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டுள்ளதுடன் விபரங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2,782 பேருக்கு கொரோனா தொற்று – 2,106 பேர் தப்பினர் – 11 பேர் பலி!

நாட்டில் நேற்று மாத்திரம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய மூவருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஐவருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்குமே கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளனர். 665 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் சென்றுவிடுவேன்’ -வடிவேல் சுரேஷ்

தமிழர்களின் ஆதரவின்றி எந்தவொரு பிரதான கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என ஒரு சில இனவாதிகள் கொக்கரிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் தமிழர்களின் பலம் என்னவென்பது தெரியும். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது.

5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றாலும் 6 ஆம் திகதியே வாக்கெண்ணும் பணி இடம்பெறும். வாக்கு பெட்டிகள் எல்லாம் பாதுகாப்பாக கச்சேரியில் வைக்கப்படும். எனவே, 5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் கச்சேரிக்கு முன் சென்று படுத்துவிடுவேன். வாக்கு பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவேன். எனக்கான வாக்குகளை எவரும் மாற்றிவிடமுடியாது.” – என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

‘விமர்சிப்பவர்களுக்கு சொல்லில் அல்ல செயலில் பதிலடி கொடுப்பேன்’ – ஜீவன்

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். எனது மக்களுக்கும் என்மீது முழு நம்பிக்கையும் உள்ளது. எனவே, என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும், செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறியதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்வும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அரசியலுக்கு அப்பால் இருவருக்குமிடையில் சிறந்த நட்புறவு இருந்தது.  எனது தந்தையின் மறைவுசெய்தி கேள்வியுற்றதும் கண்கலங்கி நின்றார். எங்களுக்கு ஆறுதல் கூறி தூணாக இருந்தார். அதற்காக அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைக்கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் விமர்சிக்ககூடாது, குறைகூறும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம். திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம்.  எனினும், எதிரணியினர் விமர்சிப்பதையே பிரச்சாரமாக செய்தனர். என்னை விமர்சித்தவர்களுக்கு என்னால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை விமர்சிக்கமுடியாமல்போனது. ஏனெனில் அவர்களின் அறிவுமட்டம் அவ்வளவுதான்.

ஜீவன் தொண்டமான் சின்ன பையன், சின்ன தம்பி என விமர்சனம் செய்கின்றனர், இதே சின்ன பையனிடம் அதிகாரத்தை தந்துபாருங்கள், மலையகத்தையே மாற்றிக்காட்டுகின்றேன். இ.தொ.காவில் இருந்து வளர்ந்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கே அவ்வளவு திமிரு இருக்குமானால், ஆறுமுகன் தொண்டமானின் அரவணைப்பில் வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?

ஆயிரம் ரூபா என்பது தொழிற்சங்கப் பிரச்சினை. ஆனால், அதனை அரசியல் மயப்படுத்திவிட்டனர். இதனால் எமது ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டன. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த சின்ன பையனை நம்புகின்றனர். எனவே, எமது மக்கள் என்னை நம்பமாட்டார்களா?

நமது சமூகத்துக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்றார்.

க.கிசாந்தன்

பெருந்தோட்ட மக்களை கைவிடமாட்டோம் – ஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உறுதி

பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை எமக்கு அளிக்கின்றது – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில்  ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (26.07.2020) நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோது கூட  பெருந்தொட்ட மக்கள் தொடர்பிலேயே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார்.  பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களையும் முன்மொழிந்திருந்தார்.

தாத்தா (சௌமியமூர்த்தி தொண்டமான்) அதன்பின்னர் பேரன் (ஆறுமுகன் தொண்டமான்)  இன்னும் அவரின் மகன் (ஜீவன் தொண்டமான்)  ஆகிய மூவருடனும் வேலைசெய்வதற்கான அதிஷ்டம் எனக்கு கிட்டியுள்ளது. இதன்படி மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மூவரும் கையாளும் அணுகுமுறைகள் தொடர்பில் எனக்கு தெரியும்.

பாட்டன், தந்தை ஆகிய இருவர் கையாண்ட அணுகுமுறைகளைக்காட்டிலும் ஜீவன் தொண்டமான் மிகவும் வித்தியாசமான முறையில் அணுகிவருகின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தின்போது அவர் மிகவும் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்தார். மறுக்கமுடியாத வகையிலேயே கருத்துகளை முன்வைத்தார்.

பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் நாம் மீண்டும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே எமது ஆட்சியின்போது மலையகத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொண்டமானே அடித்தளமிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவே, கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தினோம். எனவே, பெருந்தோட்ட மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்.” – என்றார்.

ஜீவன் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – பீரிஸ் சூளுரை

” பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் வேட்பாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். இதன்மூலம் நிலையானதொரு அரசாங்கம் உருவானது. எனவே, நாட்டு மக்கள் வழங்கிய ஆதரவை முழுமைப்படுத்தி முன்நோக்கி பயனிப்பதற்காக பாராளுமன்றத்திலும் எமக்கு பெரும்பான்மை அவசியம். சாதாரணப் பெரும்பான்மை இல்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே தேவைப்படுகின்றது. அது கிடைக்கும் என நம்புகின்றோம். எனவே, வெற்றியின் பங்காளர்களாகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நுவரெலியா மாவட்டமென்பது பொருளாதாரத்தின் மையம். தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானத்தைப்பெறலாம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் புதிய அரசாங்கம் தீர்க்கும். நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்று அமையும் என்பதுடன், தொழிற்பயிற்சி நிறுவனமும் அமைக்கப்படும்.

ஜீவன் தொண்டமான் என்பவர் சிறந்த இளம் தலைவர். அவர் தனது தந்தையின் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துசெல்லவேண்டும். தொண்டமான் திட்டமிட்டிருந்ததைக்காட்டிலும் அதனை சிறப்பாக அதனை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் ஜீ.எஸ். பீரிஸ் கூறினார்.

க.கிசாந்தன்

மரணவீட்டுக்கு வந்தவர் குளவிக்கொட்டால் வைத்தியசாலையில்

மரணச்சடங்கொன்றில் கலந்து கொள்ள வந்த நபர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (26) பதுளை-பசறை வீதியில் அமைந்துள்ள வேவெஸ்ஸ கம(4ம் கட்டை) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பஸ் வண்டியில் வந்து இறங்கிய நபரே இவ்வாறு குளவிக் கொட்டிற்கிலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...