Home Blog Page 4037

மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடு – ஹப்புதளை கூட்டத்தில் பிரதமர் உறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று ஹப்புத்தளையில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று இந்த இடத்தில் ஆறுமுகன் தொண்டமானை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது.

செந்தில் தொண்டமான் கடந்த 12 வருடங்களாக மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். செந்தில் என்பவர் மிகத் திறமையான இளைஞர். அவர் மலையக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

மலையக அரசியல்வாதிகள் பலர் எம்மைச் சுற்றியிருந்தாலும் மலையக மக்கள் தொடர்பில் எப்போதும் பேசுபவர்கள் தொண்டமான்கள் மாத்திரம்தான்.

செந்திலும் அவ்வாறு மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போதும் எங்களோடு கலந்துரையாடுபவர்.
செந்தில் தொண்டமான் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துவைத்திருக்கிறார்.

செந்தில் தொண்டமான் என்னிடம் மூன்று கோரக்கைகளை முன்வைத்தார். அதில் முதல் கோரிக்கை ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டமாகும். அது செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே இதுவரை காலமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன நாம் .அதனை மாற்றியமைத்து மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

பதுளையில் ஏற்கனவே இரண்டு பாடசாலைகளை விஞ்ஞான கல்லூரிகளாக செந்தில் தொண்டமான் தரமுயர்த்தியுள்ளார். மேலும் இரண்டு பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என என்னிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கையை முன்வைத்தார்.
அவரது கோரிக்கைக்கு அமைய நிச்சயமாக இரண்டு பாடசாலைகள் விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைவருக்கும் அரசாங்கத் தொழில் வழங்க முடியாது. ஆதலால் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தேவை உணர்ந்து ஊவா மாகாணத்தில் தொழிற்சாலைகள் நிருவப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் செந்தில் என்னிடம் முன்வைத்தார்.
அவ்வாறான தொழிற்சாலைகளையும் நாம் எமது ஆட்சிக்காலத்தில் உருவாக்குவோம்.

இவரின் திறமையையும் நேர்த்தியான அரசியல் பயணத்தையும் கருத்திற்கொண்டு மலையகத்தின் எதிர்காலத்துக்காகவும் அவர் செயற்படுவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன்.

தேயிலைத் தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கைத் தேயிலையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான செயற்திட்டங்களையும் விளம்பர உத்திகளையும் நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.

செந்தில் தொண்டமான் மலையக மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எங்களிடத்தில் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறார். அவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நாம் முழுமையான ஆதரவை அவருக்கு நாம் வழங்குவோம்.

எதிர்க்கட்சிகளில் போட்டியிட்டு தேர்தலின் பின்னர் எம்மோடு இணையும் கனவோடு காத்திருக்கும் எந்த மலையக அரசியல்வாதிக்கும் இடமில்லை. மலையத்தின் எதிர்காலம் நோக்கிய எமது பயணம் செந்திலுடன் மாத்திரமே தொடரும்.

இந்தத் தேர்தலில் செந்தில் எங்களோடு இருக்கிறார். தேர்தலின் பின்னர் செந்தில் தொண்டமானோடு நாங்கள் இருப்போம் என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார்.

பிரதமருக்கு பேரதிர்ச்சி கொடுத்த செந்தில் – ஹப்புதளையில் மக்கள் வெள்ளம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியின்கீழ் பதுளை  மாவட்டத்தில்  போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று ஹப்புதளை நகரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்திலும் பங்கேற்றார்.

பிரதம அமைச்சரின் இணைப்புச்செயலாளரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றிப் பிர்சசாரக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக மூவின மக்களும் ஓரணியில் திரண்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டு, ஹப்புத்தளை நகரமே ஸ்தம்பித்தது.

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் மாத்திரமே பங்கேற்கமுடியும். இந்நிலையில் மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததுடன், மைதானத்துக்கு வெளியில் வீதிகளில் அணிதிரண்டு நின்றும், மக்கள் பேராதரவை வழங்கினர்.

 

‘மலையக மக்களுக்கு ஜே.ஆரும் நானுமே வாக்குரிமை வழங்கினோம்’ – ரணில்

மலையக மக்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தனவே வாக்குரிமை வழங்கினார். அதன்பின்னர் எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன். எனவே, மலையக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எமக்கு உள்ளது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 1972 ஆம் ஆண்டு முதல் நுவரெலியாவில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றேன். பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு எனக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திஸாநாயக்க போன்றோர் பல சேவைகளை செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்கீழ்  பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சௌமியமூர்த்தி தொண்டமானும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ரணசிங்க பிரேமதாசவும் நுவரெலியாவுக்கு வீடுகளை வழங்கினார்.

நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கட்டடங்களை நிர்மாணித்துக்கொடுத்தேன். ஆசிரியர்களையும் வழங்கினேன். ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
நான் பிரதமரான பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. 2000 காலப்பகுதியில் ஆறுமுகன் தொண்டமான் எம்முடன் இருந்தார். பெருந்தோட்டப்பகுதியில் இருந்த பலருக்கு வாக்கு உரிமை இருக்கவில்லை. தோட்ட முகாமையாளரின் அனுமதி தேவைப்பட்டது. ஒரு சத்தியக்கடதாசி ஊடாக இந்நிலைமையை மாற்றியமைத்தேன். இதனால் சுமார் 2, 3 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்தது.

ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் நிறைய பேருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. குடியுரிமையும் வழங்கப்பட்டது. எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வழங்கினேன்.

2015 இல் பெருந்தோட்டத்துறையை கட்டியழுப்புவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் மோடியை ஹட்டனுக்கு அழைத்துவந்தேன். வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 25 தமிழ்ப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகள்கூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.கம்பெரலிய திட்டம் ஊடாகவும் அபிவிருத்திகள் நடந்தன. அதேபோல சிங்கள கிராமங்களும் மேம்படுத்தப்பட்டன.

அதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பரிசோதனைகளையும் நடத்தவில்லை. தோட்டப்பகுதிகளில் கொரோனா பரவினால் என்ன நடக்கும்? எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும். நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளையாவது நடத்துங்கள். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘செத்தாலும் ஐ.தே.க. உறுப்பினராகவே சாவேன்’ – ரணில் முன்னிலையில் நவீன் சத்தியம்!

” வென்றாலும், தோற்றாலும் வேறு கட்சிகளுடன் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன். செத்தாலும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராகவே சாவேன். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன்.” – என்று ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இன்று (25.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் நவீன் திஸாநாயக்க மேலும் கூறியதாவது,

” ஐக்கிய தேசியக்கட்சியாக தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் சிறு பயம் இருந்தது. ஆனால், கூட்டங்களை நடத்தும்போது மக்களின் பேராதரவு கிடைத்தது. எனவே, வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாம் நிச்சயம் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஆட்சியை பிடிப்பதே எமது இலக்கு. அதற்கான ஆட்டத்தையே ஆடிவருகின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சிதான் அதிக ஜனநாயக பண்புகளைக்கொண்ட கட்சியாகும். தலைவர் பதவிக்குகூட வாக்கெடுப்புமூலமே உறுப்பினர் தெரிவுசெய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது. வேறு எந்த கட்சியிலும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பலர் பிரிந்துசென்றனர். எனது தந்தை பிரிந்து சென்றார். டி.ஸ். சேனாநாயக்கவின் பேரானான ருக்மண் சேனாநாயக்க வெளியேறினார். ஆனால், கட்சிக்கு பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. இம்முறையும் அப்படிதான்.

எமது கட்சியிலும் தலைவரிடமும் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்துள்ளோம். வேறு எந்தவொரு கட்சிக்கும் இனி செல்லக்கூடாது என்ற கொள்கையுடன்தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மீண்டும் வந்தேன். தற்போது எனக்கு 50 வயது, இன்னும் 20 வருடங்கள் உயிர்வாழ்வேன் என நம்புகின்றேன். அதுவரையில் ஐக்கிய தேசியக்கட்சியில்தான் இருப்பேன். கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன். மரணிக்கும் நொடியில்கூட ஐ.தே.க. உறுப்பினராகவே இருப்பேன்.

கடந்த நான்கரை வருடங்களில் பல திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். அவற்றில் சில குறைப்பாடுகள் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்து நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்வதற்காகவே இன்னும் 5 ஆண்டுகளை கோருகின்றோம். நான் மக்களை அழிப்பவன் அல்ல, வளர்ப்பவன். அதனால்தான் இன்றளவிலும் எனது பின்னால் பலர் இருக்கின்றனர்.

ரணிலுடன் இணைந்ததான் பயணிப்பேன். அவருக்கு பின்னர் ஜனநாயக முறைப்படி தலைமைப்பதவியை ஏற்பதே எது விருப்பம்.” – என்றார்.

க.கிசாந்தன்

50 ரூபாவை இ.தொ.காவே தடுத்தது – திகா மீண்டும் குற்றச்சாட்டு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை நவீனும், இதொகாவினருமே தடுத்து நிறுத்தினர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிக்கோயாவில் இன்று (25) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் திகாம்பரம் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித்தேர்தலின்போது மலையக மக்களுள் பெருமளவானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர் அனைத்து மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கினார் என்று ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

ஜனாதிபதி என்பவர் பொதுவானவர். வாக்களித்த மக்களுக்காக மட்டுமின்றி நாட்டு மக்களுக்காகவே அவர் பணியாற்றவேண்டும். இதுகூட புரியாமல் அரசியலில் அனுபவம் இல்லாதவராக ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிட்டுவருகின்றார்.

5000 ரூபாவை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கவில்லை. அது மக்களின் வரிப்பணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, நான் அமைச்சராக இருந்தபோது பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். எனினும்,  நவீன் திஸாநாயக்கவும், இ.தொ.காவினருமே அதனை தடுத்துநிறுத்தினர். இவ்வாறு செய்துவிட்டு இன்று எம்மை குறைகூறுகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 9 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 09 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,103 ஆக அதிகரித்துள்ளது.

650 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக இருக்கின்றது.

ஆகஸ்ட் 9 ஆம் திகதி சிறிகொத்தவை கைப்பற்றுவோம் – ஹரின் சூளுரை

” தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியையும், கட்சி தலைமையகமான சிறிகொத்தவையும் நாம் நிச்சயம் கைப்பற்றுவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” உண்மையான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் எம்முடனேயே இருக்கின்றது. கட்சி பெயர் பலகை மட்டுமே ரணில் தரப்பிடம் இருக்கின்றது. ” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கொரோனா’ தொற்றாளர்கள் சிகிச்சைபெறும் வைத்தியசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைப்பெறும் வைத்தியசாலைகளிலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவமும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் கிசிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளியொருவர் நேற்று தப்பிடியோடியதால் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சில இடங்களுக்கு சென்றுவந்த பிறகே தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சிக்கினார்.

இந்நிலையிலேயே நோயாளிகள் எவரும் தப்பியோடாத விதத்திலும், சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்கள் வேண்டாம்’ – ஜீவன்

பெருந்தோட்ட பகுதியில் 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட உதவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்தவர் எமக்கு பதில் கூறவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எவராலும் பெற்று கொடுக்க முடியாது என்றும், ஆயிரம் ரூபா என்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்றும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தவர் கூறுகின்றார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் ஆயிரம் ரூபா போதாது. எனினும், வழங்கிய உறுதிமொழிபடி ஆயிரம் ரூபாவினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அது தான் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையும்கூட.

மலையகத்தில் உள்ள பிரச்சார பீரங்கிகள் மிகசிறப்பாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தில் 1000 ரூபா ஆறுமுகன் தொண்டமான் வீடமைப்பு போன்ற விடயங்களை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா பிரச்சினை என்பது இது ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்த பிரச்சினையாகும்.

இதற்கு நாம் அரசாங்கத்தை குறை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தங்களையும் சலுகைகளை கொடுக்கும் போது பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள்.

மலையகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், ஜாம்பவான்கள் ஆகியோர் சிறுபிள்ளை தனமாக கூறி கொண்டு இருக்கிறார்கள்.ஜனாதிபதி ஆயிரம் ரூபா தருவதாக கூறினார், ஏன் வழங்கவில்லையென கேட்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தின் போது கூட ஆயிரம் ரூபா சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு தருவதாக கூறினர். கடந்த அரசாங்கத்தில் உள்ள பிரதமர் கூட கூறியிருந்தார். 5 வருடகாலமாக இவர்களால் 50 ரூபாவும் வழங்க முடியவில்லை.

140 ரூபாவும் வழங்க முடியவில்லை. இறுதியில் மக்களுக்கான 5000 ரூபா கடன் தொகையினையும் வழங்க முடியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் குறைவான வாக்கு வீதத்தினையே வழங்கியிருந்தார்கள்.

இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதி அனைவரும் நன்மை பெறும் வகையில் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பணவை வழங்கினார்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

‘3 தடவைகள் கருகலைப்பு’ – நடிகர் கைது!

3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது செய்யப்பட்டார்.

தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில் 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன். பிறகு என்னோடு வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார். மூன்று முறை கருக்கலைப்பும் செய்தார்.

தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை பொலிஸார் கைது செய்தனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...