Home Blog Page 4038

கொரோனா தொற்று தீவிர பரவலை எட்டியுள்ளது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது.

எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.

நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்.

உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.

அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது.

ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும்.

‘கொரோனா’ – 200 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்தில்….

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போட்டியில் 200 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு சமூக ஊடக நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:-

இயற்கை நோயெதிர்ப்பு சக்தியின் ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும்.

ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணிபுரியும் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றை தக்க வைத்துக் கொள்ள முடிந்த அனைத்தையும் செய்ய, அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, உலகம் “தயாராக” இருக்க வேண்டும் .

சிகிச்சை முறைகள் இறப்பு விகிதங்களை குறைக்கவும், மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் உதவும். இந்த நோயெதிர்ப்பு சக்தியை உண்மையில் பரப்புவதற்கு அந்த சங்கிலிகளை உடைக்க ஏதுவாக இருக்க 50 முதல் 60 சதவீதம் மக்கள் தேவை.

இதனை ஒரு தடுப்பூசி மூலம் செய்வது மிகவும் எளிதானது; மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் நாம் அதை விரைவாக அடைய முடியும். எனவே, இயற்கை தொற்றுநோய்களின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு, அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், மக்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கத் தொடங்குவார்கள். பாதிக்கப்பட்ட நாடுகளில் பொதுவாக 5 முதல் 10 சதவீதம் மக்கள் வரை ஆன்டிபாடிகளை உருவாக்கிய ஆய்வுகள் மூலம் இப்போது நமக்குத் தெரியும். சில இடங்களில் இது 20 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்றின் அலைகள் நாடுகளில் மக்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கப் போகிறார்கள், அந்த மக்கள் சில காலம் நோயெதிர்ப்பு சக்தியுடன் இருப்பார்கள், எனவே அவர்கள் இந்த நோய்த்தொற்றின் பரவலுக்கு தடைகளாகவும் பிரேக்குகளாகவும் செயல்படுவார்கள்.

“மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நமக்கு கிடைக்கும் என்றாலும் நமக்கு இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுகள் தேவை, அதற்கு நேரம் எடுக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றை புரிந்துகொள்வதில் விஞ்ஞானம் நகரும் அசாதாரண வேகத்தை எடுத்துக்காட்டும் வகையில் 200 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன

தடுப்பூசி வளர்ச்சி என்பது பொதுவாக ஒரு நீண்ட காலம் மற்றும் அதிக உழைப்பு செயல்முறையாகும். எங்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் போட்டியில் உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

‘முதுகெலும்புள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்’ – மனோ

முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று  முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

 ” ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி  முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும், துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய  வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சஜித் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவே நாம் போராடுகிறோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. யூஎன்பி கட்சியை கைப்பற்றுவது யூஎன்பிகாரர்களின் நோக்கமாக இருக்கலாம். கூட்டணிகாரர்களான எமக்கு அதுவல்ல, நோக்கம். எமது நோக்கம், அலரி மாளிகையை கைப்பற்றுவதாகும். அங்கே பிரதமர் ஆசனத்தில் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவை அமர செய்வதாகும்.

எது எப்படி இருந்தாலும், ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, இந்த நாட்டில் ஜனநாயகரீதியாக சண்டைபோட வேண்டிய இடத்தில், சண்டையிட்டு, அழுத்தம் திருத்தமாக எமது மக்களின் அபிலாசைகளுக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தெரிவு செய்ய வேண்டியது தமிழ், முஸ்லிம் மக்களின் கடமை.

நேர்மை உள்ள, தூரப்பார்வை உள்ள, அர்ப்பணிப்பு உள்ள, துணிச்சல் உள்ள, பன்மொழி அறிவு உள்ள, விலை போகாத வரலாறு உள்ள, சொந்த இனப்பற்று உள்ள,  சகோதர இன, மதங்களின் மீது மரியாதை உள்ள, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறியுங்கள்.

இதை  கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களை கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்து பார்த்தால், உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும் இதை கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால், அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகி விடும்.

இதை நான் இன்று எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் கூறவில்லை.  நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சொல்கிறேன். ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பிறகு இதை செய்ய முடியாது. இப்போதே உங்கள் தீர்மானங்களை எடுங்கள்.   ” – என்றார்.

நோர்வூட்டில் 200 லீற்றர் தாரை களவாடிய இருவருக்கு மறியல்

200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நோர்வூட் –  மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்பின்னரே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

பிரதமர் மஹிந்த நாளை நுவரெலியாவில் சூறாவளிப் பிரச்சாரம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (26) நுவரெலியா மாவட்டத்துக்கான பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
ஹட்டனில் நடைபெறும் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார் என இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான  மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை மதியம் 2 மணியளவில் ஹட்டன் டி.கே.டபல்யூ (Dkw)ம ண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் 5 மாகாணங்களில் கடும் வறட்சி – 4 மாகாணங்களில் மழை!

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 5 மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. இதனால் 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடமேல், கிழக்கு, தென்,வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாவட்டங்களிலேயே வறட்சியுடனான காலநிலை தொடர்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்தில் வறட்சி நிலவினாலும் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2,764 பேருக்கு கொரோனா – 2,094 பேர் மீண்டனர் – 11 பேர் மாண்டனர்!

நாட்டில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும். பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில்கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் இதுவரையில் 2 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.659 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கான ஆசனங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுகின்றது.

ஆளப்போவது எந்த கட்சி, வெற்றிப்பெறப்போகும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு விகிதாசார முறைப்படி எவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் பார்ப்போம்.

ஆசன ஒதுக்கீடு 

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டமொன்றில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழிக்க வருவதே செல்லுபடியான வாக்குகளாகும்.

அவ்வாறுவரும் தொகையிலிருந்து – , செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும்.

அதன்பின்னர் வரும் வாக்கு தொகையை மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களால் (போனஸ் ஆசனம் ஒதுக்கிய பின் வருவது) பிரிக்க வருவதே முதல் சுற்றில் ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும்.

உதாரணமாக 2015 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டு இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்.

2015 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 734 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 32 ஆயிரத்து 788 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 946 ஆகும்.

இவ்வாறு செல்லுபடியான 3 லட்சத்து 87ஆயிரத்து 946 வாக்குகளில் இருந்து, 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகள் கழிக்கப்படும். (நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே 5 வீதத்துக்கும் மேல் வாக்குகளைப்பெற்றிருந்தன.)

அதேபோல் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 678 ஆககும். ( 387,946 – 11,678)

இதன்படி செல்லுபடியான   வாக்குகளில் இருந்து 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகளை கழிக்க வரும் எண்ணிக்கை 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆகும்.

இந்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளே ஆசன பங்கீட்டுக்கான வாக்குகளாக கருத்திற்கொள்ளப்படும். நுவரெலியா மாவட்டத்துக்கு 8 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு ஆரம்பத்திலேயே போனஸ் ஆசனம் ஒன்று ஒதுக்கப்படும். எஞ்சிய 7 ஆசனங்களே கட்சிகளுக்கு பங்கிடப்படும்.

இதன்படி 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளை 7 ஆல் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்க வருவது 53 ஆயிரத்து 753 வாக்குகளாகும். அதாவது முதற்சுற்றில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும். கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை குறித்த எண்ணிக்கையில் பிரிக்க வரும் மதிப்பீட்டுக்கமையவே ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது 2 லட்சத்து 28 ஆயிரத்து 920 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை ஒரு ஆசனத்துக்கான வாக்குகளால் பிரிக்க வருவது (228,920 /53,753) 4 ஆகும். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆனங்கள் ஒதுக்கப்பட்டது.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 லட்சத்து 47 ஆயிரத்து 348 வாக்குகளை ப்பெற்றிருந்தது. (147,348/53,753) இதனை பிரிக்க வருவது 2 ஆசனங்கள். அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மீதம் ஒரு ஆசனம் இருக்கின்றது. 5 வீதத்துக்கும் மேல் பெற்ற வேறு கட்சிகளும் இல்லை. இதன்போதே எஞ்ஞசி வாக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டு 2ஆம் சுற்றில் ஆசனப்பகிர்வு இடம்பெறும்.

4 ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 ஆயிரத்து 908 வாக்குகளே எஞ்சியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு 39 ஆயிரத்து 842 வாக்குகள் எஞ்சியுள்ளன. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கே அந்த ஆசனம் வழங்கப்படும்.

இதன்படி  ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஐக்கிய தேசியக்கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும் நுவரெலியா மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியில் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருந்தவர்களும் சபைக்கு தெரிவானார்கள்.

முதல் சுற்றிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டால் எஞ்சிய வாக்குகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

ஆர்.சனத்

செந்திலின் வெற்றியுடன் பதுளை மிளிரும்

செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளை மாவட்டத்தில் மொட்டு அணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பதுளையில்  பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர், செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளையில் அரசாங்கம் அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 7 ஆசனங்கள் கிடைப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளும் கட்சியில் செந்தில் தொண்டமான் இருக்கும் போது எதிர்தரப்பில் இருந்து எந்தவொரு நபரையும் ஆளும் கட்சி உள்வாங்காது எனவும் இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சி பதுளையில் 7 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், எதிர் தரப்பினருக்கு ஆளும் கட்சியின் கதவு அடைத்தே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் தொண்டமானுக்கு அடுத்த அரசாங்கத்தில் பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘தேர்தல் கூட்டத்துக்கு செல்லாத தோட்ட தொழிலாளர்களின் வீடுகள்மீது கல்வீச்சு தாக்குதல்!

கேகாலை தெஹிஓவிட்ட − மாஒயா பகுதியில் ஆளுங்கட்சியால் நடத்தப்பட்ட பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்காத தோட்டத்தொழிலாளர்களின் லயன்கு டியிருப்புகள்மீது தொடர்ச்சியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 12 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனால் தொழிலுக்குகூட செல்லாமல் தமக்கு வீட்டுக்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோட்ட தலைவர் ஒருவரின் வீட்டிலேயே பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் பங்கேற்காததாலேயே தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...