“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 சபைகளில் 8 ஐ கைப்பற்றுவதற்குரிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
“கிராமிய மட்டத்தில் மொட்டு கட்சிக்குரிய ஆதரவு அலை மீண்டும் வலுத்துவருகின்றது.
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்த அரசாங்கத்துக்கு நாம் பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.
எம்முடன் சகோதரக் கட்சிகள் கைகோர்க்கும். 8 சபைகளில் பெரும்பான்மை பலத்தை மொட்டு கட்சி கைப்பற்றும். அதற்குரிய வேலைத்திட்டம் உள்ளது.
அதேவேளை, கட்சி தாவினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் சட்டமூலத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினராகிய நாம் எதிர்ப்பு இல்லை. அச்சட்டமூலத்துக்கு ஆரவு வழங்கப்படும்.” எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.










