ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து 42 மாணவர்களும், ஆசிரியை ஒருவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (20) வெளியாகின. இதில் நான்கு மாணவர்களுக்கும், ஆசிரியைக்கும் வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.
இவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.










