மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (15) சிறிகொத்தவில் நடைபெற்றது.
இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார் என கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தெரிவித்தார்.