விபத்தா, சதியா?

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்தப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன.

ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
காசாமுனையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதனிடையே, கடந்த மாதம் முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிப்படை தளபதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது அதுவே முதல்முறையாகும். இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தின.

அதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் தேவை ஏற்பட்டால் இதைவிட பலமடங்கு பலம் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் 17ம் திகதி தெரிவித்திருந்தார்.

அவர் கூறிய 2 நாட்களில் (கடந்த மாதம் 19ம் திகதி) ஈரானின் இஷ்பஹான் நகரில் உள்ள விமானப்படைத்தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அசர்பைஜான் சென்றுவிட்டு ஈரான் திரும்பியபோது ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் தமது நாட்டுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles