ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுவை மேற்கொண்டு விசாரிப்பதா அல்லது ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்வதா என்பது குறித்து நீதிமன்றம் செப்ரெம்பர் 22 ஆம் திகதி தீர்ப்பளிக்கும்.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தனர்.
இந்த மனுவில், சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோல், எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.










