தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,
“ரிசாத் பதீதூனின் ஆதரவை பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என, அரசாங்கத்தின் முதலாமவர் முதல் கடைக்குட்டி வரை கிளிப்பிள்ளை கணக்கில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்..!
அரசுக்குள்ளே பதீதூனையோ, அவர் கட்சி எம்பிகளையோ உள்வாங்குவது இருக்கட்டும்..!
எனக்கென்ன சிரிப்பு கேள்வி என்றால், கடந்த நவம்பர் மற்றும் இந்த ஆகஸ்ட் தேர்தல்கள் வரைக்கும், நீங்கள் தானப்பா, சட்டமா அதிபர் மாதிரி குற்றப்பத்திரிகை வாசித்தீர்கள்.
ரிசாத்துக்கும், சஹரானூக்கும் தொடர்புண்டு. ரிசாத் தம்பிக்கு நேரடி தொடர்புண்டு. நல்லாட்சி அரசியல் காரணங்களால் இவற்றை மூடி மறைக்கிறது. பொலிஸ் மீது அழுத்தம் செலுத்தி விசாரணையை தடுக்கிறது என்றெல்லாம் நீட்டி முழக்கி, எமது ஆட்சிக்கு எதிராக சிங்கள மக்களை உசுப்பேத்தினீர்கள்.
முத்தாய்ப்பாக, இந்த வீரவன்ச, கம்மன்பில இரட்டையர்கள் சொன்னதுதான் “ஹைலைட்ஸ்”..!
“நாம் அம்புட்டு ஆதாரங்களையும் அடுக்கி வைச்சிருக்கோம். நம்ம கோட்டா ஆட்சி வரட்டும். ஒரே வாரத்தில், ரிசாத் உட்பட, இந்த சஹரான் கும்பலை பிடித்து உள்ளே போடுவோம்” என்றார்கள்..!
இப்போ, கோ-ஆட்சி வந்து, 12 மாசம் ஆகப்போகுது. ஒன்றையும் காணோம். விசாரணை போற போக்கை பார்த்தால் இன்று அரசுக்கு உள்ளே இருக்கும் மைத்திரிதான் உள்ளே போக வேண்டும் போல் தெரிகிறது..!
இடையில், சிங்கள மக்களை, பெளத்த தேரர்களை சமாளிக்க, ரிசாத் தம்பியை கண்டபடி பேசி, ஆர்ப்பாட்டமாக பிடித்து, இப்போ சத்தமில்லாமல் விட்டும் விட்டீர்கள்..!
எல்லா கதையும் காத்தோட போச்சு..!
