வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி!
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட பீரிஸ் ஓரங்கட்டப்படவுள்ளார். ஜனாதிபதி...
‘கோட்டாகோ கம’வைக் கைப்பற்றியது இராணுவம்! போராட்டக்காரர்கள் வெளியேற்றம் – 9 பேர் கைது!!
கொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.
படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
பிரதமர் பதவி வழங்கினால் சஜித் ஏற்பாரா?
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பட்சத்தில்,...
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி!
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.
திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
முன்னதாக...
ரணிலின் இடத்துக்கு வஜீர அபேவர்தன!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாகிவிட்டதால், அக்கட்சிக்குரிய தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் யார் நாடாளுமன்றம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜீர அபேவர்தன, பொதுச்செயலாளர் ரங்கே பண்டார,...
பிரதமர் பதவி தினேஷிடம் ஒப்படைப்பு!
அரச பொறிமுறை மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கும் வகையில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அமைச்சரவை நாளை (22) நியமிக்கப்படவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் முற்பகல் 9 மணிக்கு, ஜனாதிபதி முன்னிலையில்...
தம்மிக்க பெரேரா இராஜினாமா!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
பஸில் ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் வந்த தம்மிக்க பெரேராவுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு...
பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது கட்சியின் முடிவைமீறி, டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்த விவகாரம் தொடர்பிலேயே பீரிசுக்கு எதிராக...
புதிய அமைச்சரவை நியமனம் நாளை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை புதிய அமைச்சரவை நியமனம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் உதவியை கோரும் குற்றப் புலனாய்வு பிரிவு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் பொதுமக்கள்...












