கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 55 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
70 பேருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதிலேயே...
அம்மனுக்கு சூடமேற்றி தங்க நகைகளை களவாடியோர் இராகலையில் கைது!
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனபிட்டிய, விராலிகலை தோட்டத்தில் கரகம் பாலிக்கும் கோவிலில் அம்மன் சிலைக்கு அணிவித்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் இருவரை, இராகலை பொலிஸார், நேற்று (23) மாலை கைது...
‘கொரோனா’ – நாட்டில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 190 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
113 ஆண்களும், 77 பெண்களுமே இவ்வாறு...
நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 315 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.
‘மனிதனுக்குள் இனத்தையும், மதத்தையும் தேடாமல் மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கியவர்’
" மனிதனுக்குள் இனத்தையும், மதத்தையும் தேடாமல் மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. ஜனநாயகத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக பொங்கியெழுந்து போராடியவர். முக்கியமானதொரு காலகட்டத்தில்...
‘போராளி மங்களவை இழந்து தவிக்கிறேன் – மீண்டும் சந்திப்போம் என கண்ணீருடன் விடை தருகிறேன்’ – மனோ
வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு! 2007ல் பாராளுமன்றத்தில் அரசு பக்கமிருந்து எதிரணி பக்கம் நீங்கள் வந்த போது நான் அனுப்பிய இக்குறிப்பு ஞாபகமிருக்கின்றதா? மீண்டும் சந்திக்கும் வரை கண்ணீருடன் விடை பெறு...
மங்களவின் மறைவு இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது – செந்தில் தொண்டமான் இரங்கல்
முன்னாள் நிதி அமைச்சரும் கடந்தகால அரசாங்கங்களில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்திருந்த சிரேஷ்ட அரசியல்வாதி மங்கள சமரவீரவின் திடீர் மறைவானது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப்...
‘இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத நேர்மையான மனிதர் மங்கள’ -திகா இரங்கல்
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மிகவும் நேர்மையான மனிதர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி...
மங்களவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் (1989 – 2020)
1983 – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக நியமனம்.
1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கிய மங்கள சமரவீர 11,971 விருப்பு வாக்குகளைப்பெற்று, நாடாளுமன்ற அரசியல்...
‘கிங் மேக்கர்’ – மங்கள அரசியலில் கடந்துவந்த பாதை
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (வயது – 65) இன்று காலமானார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
அரசியலில் மங்கள கடந்துவந்த...



