நுவரெலியாவில் பஸ் விபத்து 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்
நுவரெலியா – வலப்பனை பகுதியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளானவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸல்லாவை பகுதிக்கு திருமண நிகழ்வொன்றிற்காக வருகைத்...
பொது மனுக்கள் பற்றிய பாராளுமன்ற குழுவில் மூன்று மலையக எம்.பிக்கள்
பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
பாராளுமன்றத்தின் 122 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...
பொருளாதார விவகார அமைச்சை கோருகிறார் தம்மிக்க பெரேரா
" தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்ககூடிய அமைச்சு பதவியொன்றை ஜனாதிபதி வழங்கினால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
'பொருளாதார விவகாரம்' தொடர்பான விடயதானமும் அதனுடன்...
உயர்தரப்பரீட்சை – 27,352 பேர் 3 பாடங்களிலும் ‘F’
2021 உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 27 ஆயிரத்து 352 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 22 ஆயிரத்து 928 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர்.
அதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு...
தேசிய சபை குறித்த வரைபை கட்சி தலைவர்களிடம் கையளித்தார் பிரதமர்
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலேயே அவர் இதனை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்...
போதைப்பொருள் பாவனை – யாழில் இரு பெண்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள், போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது என...
காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரைத்தேடி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில்...
ஜெனிவா இராஜதந்திர சமர் – அலிசப்ரி, விஜயதாச களமிறக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர்...
பாதாள குழு மோதல் – இளைஞன் சுட்டுக்கொலை!
கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
26 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியொருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த நபர்...








