பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளன.
ஹர்த்தாலுக்கு மலையக தொழிற்சங்கமும் ஆதரவு!
தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்திற்க்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு என்கிறார் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற...
இராகலை தோட்ட வைத்தியசாலையை மூடியமையால் மக்கள் அசௌகரியம்
இராகலை தோட்ட வைத்தியசாலையை தோட்ட நிர்வாகம் மூடியமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் இராகலை இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் இயங்கிய தோட்ட வைத்தியசாலை...
ஜனாதிபதியை எதிர்க்க வாசு மறுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு...
கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் வழமையான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கணினி கட்டமைப்பின் பராமரிப்பு...
சர்வதேச கொடையாளர் மாநாட்டை இலங்கையில் உடன் நடத்தவும்!
“ நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்தவும். இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தயார்.”
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில்...
நாளை ஹர்த்தால் – ரயில்வே தொழிற்சங்கமும் ஆதரவு
ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை...
வரலாற்று தவறை இழைத்துவிட்டது அரசு – ஒப்புக்கொண்டார் நிதி அமைச்சர்
வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய தருணத்தில், அதனை குறைத்து அரசு வரலாற்று தவறிழைத்துவிட்டது. சர்வதேச நாணய நிதியத்தை நாடும் முடிவை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். 50 மில்லியன் அமெரிக்க டொலரே தற்போது கையிருப்பில்...
பிரதி சபாநாயகர் யார்? இன்று இருமுனைப் போட்டி!
நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது முதல்கட்ட நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவும், எதிரணி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை இழுத்தடிக்க திட்டமா?
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள நம்பிக்கை யில்லாப் பிரேரணைகளை நாடாளுமன்றில் எடுப்பது குறித்துத் தீர்மானிப்பதை சபாநாயகர் தள்ளிப் போட்டிருக் கிறார் எனத் தெரியவருகிறது.
மேற்படி...






