திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா...
‘அவசரகால சட்டம் குறித்து விமல் வெளியிட்ட அறிவிப்பு’
" தற்போதைய அரசு சட்டப்பூர்வமானது. அது அரசமைப்புக்கு உட்பட்டது. எனவே, அவசரகால சட்டத்துக்கு இம்முறை ஆதரவாக வாக்களிப்போம்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
அவசரகால சட்டம்...
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு முடிவு!
அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
‘பஸில் ஒதுங்கவில்லை – அவரின் கட்சி பணி தொடர்கிறது’
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தேசிய அமைப்பாளராக பஸில் ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டுவருகின்றார் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று...
‘அமைச்சு பதவிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது – ஓய்வு பெறுவேன்’! சபையில் சஜித் சீற்றம்
" மக்களை ஒடுக்கும் இந்த அரசுடன் எமக்கு கொடுக்கல், வாங்கல் இல்லை. அரசில் இணையமாட்டோம். அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்."
இவ்வாறு எதிர்க்கட்சித்...
ஹர்ச டி சில்வாவுக்கு அமைச்சு பதவி?
சர்வக்கட்சி அரசின் நிதி அமைச்சு பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும், அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில் ஹர்ஷ...
‘குடு காரர்களே கோல்பேஸில்’ – அகற்றுமாறு அமைச்சர் பிரசன்ன வலியுறுத்து
'குடு' காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம்." - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த தந்தையும் மகனும் கைது
பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...
தனிஸிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை
இம்மாதம் 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் தனிஸ் அலி என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டுபாய்...









