சஜித் எங்கள் வீட்டு பிள்ளை – தாய் வீடு திரும்ப கதவு திறந்தே உள்ளது! ஐ.தே.க. அழைப்பு!
“ சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்த பிள்ளை, அவர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தாய் வீடு திரும்பலாம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய...
யாழில் ரயிலுடன் மோதி வேன் விபத்து – இருவர் பலி!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று மாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்...
9 வளைவு பாலத்தை பார்க்கச்சென்ற சுற்றுலாப் பயணிகள்மீது குளவிக்கொட்டு!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச்சென்ற எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் 9 பேரும், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 10 பேரும் தெமோதர வைத்தியசாலையில்...
பாடசாலை மாணவியை வன்புணர்ந்த கொட்டகலை பகுதி ஆசிரியருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆசிரியர் ஒருவருக்கு (எம். வைத்தியநாதன்) நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் இன்று, 17 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
மலையகத்தில் அரசியல், பொருளாதார, சமூக விடுதலை- புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,...
‘தாக்குதல்’ – 13 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறியல்!
சப்ரகமு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரும் இன்றையதினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 13...
இலங்கையில் அரச துறையின் திறனை கட்டியெழுப்ப இந்திய – இலங்கை கூட்டாண்மை ஆரம்பம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கையின் பொதுத்துறையின் திறனை அதிகரிக்க இந்திய-இலங்கை கூட்டாண்மை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்தியா விஜயத்தின் போது, இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருநாடுகளுக்கும்...
மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!
திருகோணமலை , கின்னியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த...
பாடசாலைக் கல்வியில் AI பாடநெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!
பாடசாலை கல்வி முறையில் AI தொழில்நுட்ப பாடநெறியை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
AI செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக் குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி...
“உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்”
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும்...













