போயா தினத்தில் பியர் விற்பனை – மாறுவேடத்தில் சென்ற பொலிஸார்! நடந்தது என்ன?
போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் யாழ். மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது.
மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே நேற்று (26) இரவு...
நீரில் மூழ்கி மாணவன் பலி – நாவலப்பிட்டியவில் சோகம்!
நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி 15 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நண்பர்கள் சகிதம் குளித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்டு அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், உயிரிழந்துள்ளார்.
கடுகன்னாவ,...
பஸ் மோதி எட்டு மாடுகள் இறந்தன – அதிக வேகத்தால் ஏற்பட்ட விபரீதம்….!
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் திங்கள் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. பல மாடுகள் படுகாயமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணிகளுடன் அதி...
2023 இல் 21, 953 விபத்துகள் – 2,163 பேர் பலி!
2023 ஆம் ஆண்டுக்குள் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் பலியாகியு ள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்,...
யாழில் கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு...
அமைச்சர் கெஹலியவிடம் சிஐடியினர் விசாரணை!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(260 காலை 9 மணி முதல் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள்...
புரட்சிபடை தளபதியை கொன்ற இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை…
சிரியாமீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால் ஈரான் கடுப்பாகியுள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கில் மீண்டும்...
மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் – மனோ
" இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன்...
ஆலய உண்டியல் திருடச் சென்றவரை தீண்டியது பாம்பு…..!
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களில் ஒருவரை, பாம்பு தீண்டியதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன்...
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஹட்டனில் அஞ்சலி…
சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கான 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் மலையகத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் வைத்து விளக்கேற்றி பொது மக்கள், அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி...



