மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு : பொதுமக்கள் கருத்துகளை முன்வைக்க சந்தர்ப்பம்
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோ...
‘தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல்’ – சம்பந்தன் கடும் சீற்றம்
"அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும் இந்த நாடும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்."
- இவ்வாறு...
கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரானார் ஜஸ்வர் உமர்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 45 வாக்குகளைப் பெற்றார்.
ஜேர்மனியில் முக்கியஸ்தர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ள்ஸ் மிசெலுக்கும் (Charles Michel) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு ஜேர்மனின் பேர்லின் நகரில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தேசிய பாதுகாப்பு...
இலங்கையில் நிபா வைரஸ்; பரவிய தகவலில் உண்மையில்லை
இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ்...
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகை பண மோசடி
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கடுகண்ணாவை பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்தபோது...
பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 50 பேர் பலி
பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில், இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 50 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து தற்கொலைத்...
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி மாத மின் கட்டணத்தை ஒக்டோபர் மாதமே திருத்தியமைக்க கோரிக்கை விடுத்ததாக மின்சார சபையின் பொது முகாமையாளர்...
மலையக ரயில் சேவையில் பாதிப்பு
மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதையில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளதாகவும், புகையிரத ஊழியர்கள்...
உயர்தர பரீட்சையை பிற்போடுவதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன? கல்வி நிபுணர்கள் சுட்டிக்காட்டு
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
பரீட்சைகளை ஒத்திவைப்பது...








