Home Blog Page 255

10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது.

2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார்.

நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல்போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க முடியும். 10 பேர்ச்சஸை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். பணடாரளையில் கட்டப்படும் வீடுகளுக்கும் விரைவில் அசல் உரித்து வழங்கப்படும்.

நல்லாட்சி காலத்திலேயே மலையக பகுதிகளில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டன. அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றால் நல்லது. ஆனால் கம்பனிகள் இன்னும் பதிலை வழங்கவில்லை. எனினும், வருட இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென ஜனாதபதி கூறுகின்றார். இதனை நான் நம்பவில்லை.

தோட்டங்களை மக்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்யுமாறு கோருகின்றேன். எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணிவை வழங்கினால், அவர்களால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள முடியும். அதுவே சிறந்த திட்டம்.

நாம் களவெடுக்கவில்லை. மக்களுக்கும் இது தெரியும். எனவே, அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். சில அமைச்சர்கள் பொய்யுரைப்பதுதான் பிரச்சினை.” – என்றார் திகாம்பரம்.

மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டம்: இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக்கப்பட வேண்டும்

 

” இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கையின் ஏனைய மக்களுக்குச் சிக்கல்கள் இன்றி நிறைவுபெறும்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கு காரணம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை இல்லாமையாகும். எனவே பெருந்தோட்ட வீடமைப்புக்கு இந்தியா நிதியுதவி வழங்கும் போது இலங்கை அரசு அதற்கான காணி உரித்தினை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ‘இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக’ மாற்றியமைக்கப்படல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட்டுள்ள மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டமான 2000 வீடுகளை அமைப்பதற்காக பண்டராவளையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து மலையக அரசியல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் வீடமைப்புத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுககாக முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், அத்தகைய உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை அரசு அதற்கு சமாந்திரமான பங்களிப்பை வழங்கும்போதே அது மக்களுக்கு உண்மையான பயனைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும். பண்டாரவளையில் வழங்கிவைக்ப்பட்ட ஆவணத்தில் ‘இலங்கை அரசின் ஆதவுடன் இந்திய அரசின் பூரண நிதிப்பங்களிப்புடன்’ என தடித்த எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டாயிரம் வீடுகளுக்கு இலங்கை அரசு வழங்கிய ஆதரவு என்ன ? எனும் கேள்வியே இங்கு எழுகின்றது. மேற்படி வீடமைப்புத் திட்டத்துக்காக இந்தியா முழுமையான நிதிப்பங்களிப்பை வழங்கும்போது இலங்கை அரசே அதற்கான காணியினை வழங்க வேண்டும்.

அதனை உறுதி செய்து அமைச்சரவைத் தீர்மானத்தை எடுத்து இந்திய வீடமைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்க காணி உரித்தினை வழங்கவெண்டிய இலங்கை அரசு வெறுமனே ஆதரவு வழங்குகிறோம் என இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை உறுதி செய்யும் கடிதங்களைக் கொடுப்பது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்த்தின் நடிவடிக்கை அல்ல.

நல்லாட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்திய வீடமைப்புத்திட்ட பயனாளிகளுக்கு ‘சின்னக்கர ஒப்பு’ என சொல்லப்படும் காணி உறுதிகள் அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் வழங்கிவைக்கப்பட்டன. பண்டாரவளை விழாவில் தற்போதைய காணி அமைச்சரையே காணவில்லை. மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதுகூட தெரியவில்லை. இப்படி துறைக்கு பொறுப்பானவர்கள் இல்லாமல் அரசாங்கம் வழங்கும் ‘ஆதரவு’ தான் என்ன? வீடமைப்பு குறித்து பெருந்தோடட சமூக நலன் பிரதி அமைச்சர் கருத்து கூறினால், அந்த வீடு அமைந்திருக்கும் காணி குறித்து அமைச்சர் லால்காந்தவே பொறுப்பேற்க வேண்டும்.

நல்லாட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், காணி அமைச்சர், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் இணைந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஊடாகவே காணி உறுதிகள் உறுதி செய்யப்பட்டன. அப்படி ஒரு அமைச்சரவைப்பத்திரம் தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்தாகத் தெரியவில்லை. நல்லாட்சி அரசாஙகத்தின்போது கட்டிமுடிக்க்பட் வீடுகளுக்கு உறுதி வழங்கப்பட்டமை முதல் கட்ட முடிவாகும். ஆப்போது ஒரு உறுதிப்பத்திரம் காணி மறுசீரமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய அரசாங்கம் அந்த இடத்தல் இருந்து ஆரம்பித்து காணி உறதியை வழங்கி வீடமைப்புத் திட்டததை ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு பூரண நிதியீட்டம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 14 ஆயிரம் வீடுகள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு என உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தில் மலையகத்துக்கு வெளியே வட-கிழக்குத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட 40 ஆயிரம் வீடுகளும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 6 ஆயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் இந்தி வீடமைப்பென்பது 14 ஆணடுகள்; இழுபறியாகவே உள்ளது. இலங்கையில் ஏனைய மக்களுக்கு இத்தகைய காணிப்பிரச்சினை இல்லாததால் அவை சிச்கல் இன்றி நிறைவுபெறுகின்றன.

எனவே மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை – இந்திய வீடமைப்புத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு இந்தியா பெற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு வீட்டுக்குமான காணித்துண்டினை அதற்கான உரிமத்துடன் இலங்கை அரசாங்கம் வழங்குதல்; வேண்டும் என புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசியல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​ கோரி வில்​லிவாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்

வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்க படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம் என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.

“காணி” என்ற மணமகள், “வீடு” என்ற மணமகன் இல்லாத, காணி-வீட்டு உரிமை கல்யாணம் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி உள்ளார்கள். உண்மையில், நடந்தது, “காது குத்தல்” கல்யாணம் என நான் நினைக்கிறேன். நன்றாக ஜனாதிபதி அனுரவுக்கு இந்த விடயம் முழுமையாக தெரியும் என நான் நம்பவில்லை. அவரது பெயரை வைத்து வாழும், மலையக ஜேவிபி அமைச்சர்கள், அனுரவை ஏமாற்றுகிறார்கள் எனவும் நான் நினைக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்த பட்ட விசேட ஊடக சந்திப்பில் மனோ கணேசன் எம்பி, மேலும் தெரிவித்துள்ளதாவது;

இந்த 10,000 தனி வீட்டு திட்டம் என்பது, தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அழைத்து வந்து, நோர்வுட் நகரில் அவருக்காக நாம் நடத்திய வரவேற்பு நிகழ்வில், அவர்களிடம் கேட்டு பெற்று, அவரது வாயால் இந்திய அரசின் சார்பில் அவர் வழங்கிய உறுதிமொழியின் மூலம், இலங்கை வாழ் மலையக மக்களுக்காக நாம் பெற்று கொடுத்தது ஆகும். இதையே இன்றைய அரசு முன்னெடுக்க முனைவதாக தெரிகிறது. நல்லது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

ஆனால், அரசாங்கத்தில் இருக்கும் ஜேபிபி மலைநாட்டு அமைச்சர்கள், எம்பிகள், இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது தொடர்பில் தாம் அனுபவமற்றவர்கள் என்பதை முழு உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்ல, நாம் ஆரம்பித்த திட்டத்தையே அரைகுறையாக செய்து கொண்டு, எம்மையே மிகவும் தரக்குறைவாக குறை கூறி கொண்டு திரிகிறார்கள்.

இன்று, மலைநாட்டில். தனி வீடு கட்ட காணி அடையாளம் காண படவில்லை. அந்த காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த பட வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த பட வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்க படவில்லை. ஆனால், விழா நடத்தி, அப்பாவி மக்களையும் ஏமாற்றி உள்ளார்கள். தங்கள் தலைவர், நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மலைநாட்டுக்கு அழைத்து வந்து, அவரையும் ஏமாற்றி உள்ளார்கள்.

இது போதாது என்று, இந்த வீட்டு திட்ட செலவில் 90% நிதியை எமக்காக நன்கொடையாக தரும் இந்திய அரசின் தூதரையும் அழைத்து வந்து, அவரது பெயரையும் பயன் படுத்தி, அரசியல் செய்கிறார்கள். தங்கள் இயலாமையை, இந்திய அரசின் மூவர்ண தேசிய கொடியால் மறைக்க முயல்கிறார்கள். வரலாற்றில் இதற்கு முன்பு நாம், இந்தய தூதரை அழைத்து வந்து, ஒன்றில், புது வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி விழா எடுப்போம். அல்லது புது வீடுகளை கட்டி முடித்து, கையளிக்கும் விழா நடத்துவோம்.

ஆனால், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், இந்திய தூதரையும் அழைத்து வந்து, பயனாளிகள் என்று அப்பாவி மக்கள் சிலரையும் அழைத்து வந்து, வெறும் காகிதத்தில், “உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம்” என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இவற்றின் மூலம், “பொய் சொல்லவும், தவறு செய்யவும், பயமும், வெட்கமும் இல்லாத மனிதர்கள்” என தம்மை இந்த ஜேபிபி மலைநாட்டு அமைச்சர்கள், நிரூபித்து உள்ளார்கள்.

திகா விரைவில் ராஜினாமா! மாகாணசபைத் தேர்தலில் போட்டி?

 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அவர் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தமது கட்சியை சார்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவியை வழங்கிவிட்டு, மாகாண தேர்தலில் மக்கள் ஆணையை பெறும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

கட்சி பிரமுகர்களுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வருகின்றார் எனவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

மாகாணசபைத் தேர்தலில் வெற்றிநடை போடுவோம்: 4 எம்.பிக்கள் விரைவில் ராஜினாமா!

மாகாணசபைகளுக்குரிய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றிபெற முடியும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அவ்வாறு நம்பிக்கை இருப்பதால்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான்கு எம்.பிக்கள் முன்வந்துள்ளனர் எனவும் ஊடக சந்திப்பொன்றின்போது அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களும் தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும் எனவும் அஜித் பி பெரேரா எம்.பி. குறிப்பிட்டார்.

பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக 7 பயணக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

ஹமாஸ் அமைப்பிடம் 20 பணய கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் 7 பணய கைதிகளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்து உள்ளது.

இதுபற்றிய தகவலை இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட பின்னர், பணய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.

இந்த கைதிகள் பரிமாற்ற நிகழ்வு டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும். இதனை நாடு முழுவதும் உள்ள பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள்.

போரை நிறுத்துவதில் நான் வல்லவன்: ட்ரம்ப் தம்பட்டம்!

 

இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதகை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து குரல் எழுந்தது. இந்நிலையில்தான் ஜனாதிபதி ட்ரம்ப் காசா – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு ஒரு 20 அம்சத் திட்டத்தை முன்வைத்தார்.

இது தொடர்பில் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பிடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இருதரப்பும் உடன்பட்ட நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க, இஸ்ரேலும் காசா மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பயணப்படுகிறார். தனது அதிகாரபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இதன்போது, ‘ இந்தப் போர் ஓய்ந்தது. இனி எல்லாம் இயல்பாக இருக்கப்போகிறது என்று நான் நம்புகிறேன். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி ஏற்படுவதில் கத்தாரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்னெடுப்புகளும் பாராட்டுக்குரியது.

ஹமாஸ் தரப்பிலிருந்து எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். காசா மீள் கட்டமைப்பை உறுதி செய்ய விரைவில் ஓர் அமைதிக் குழு உருவாக்கப்படும். இந்தப் போர் முடிவுக்கு வந்ததில் யூதர்கள், இஸ்லாமியர்கள், அரபு நாட்டவர் என அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்.” என்று குறிப்பிட்டார்.

இது நான் நிறுத்தியுள்ள 8-வது போர். இப்போது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போர் குறித்து நான் திரும்பி வந்ததும் பார்க்க வேண்டும். ஏற்கெனவே நான் உக்ரைன், ரஷ்யா போரையும் நிறுத்தும் முயற்சியில் உள்ளேன நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன் என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஹமாஸ் தரப்பு தான் விடுவிக்கவுள்ள 20 பிணைக் கைதிகளின் பெயர்களை அறிவித்துள்ளது.

முன்னாள் எம்.பிக்கள் பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டி!

மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுத்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோதுகூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பிக்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அர்ச்சுனா எம்.பி. கைது!

0
கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில்...

பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்

0
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்கள் பதுளை மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இரு நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது....

தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

0
“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளர் குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. தோட்ட நிர்வாகத்தின்...