Home Blog Page 4040

பொகவந்தலாவயில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பொகவந்தலாவ கெசல்கமு ஓயா வனப்பகுதியான மோரா தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளார்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று, வனப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இருவரை கைது செய்ததுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்!

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய கொரோனா நோயாளியை பிடிக்க 6 விசேட பொலிஸ் குழுக்கள் – இராணுவமும் களத்தில்

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
அத்துடன், இராணுவ புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில இராணுவக்குழுக்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘அன்பளிப்பாக சாராயம் வழங்கி வாக்கு கேட்பது துரோக அரசியலின் உச்சம்’

மலையக சமூகம் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் அதன் பிரதான பங்குதாரர்களாக இருக்கும் எமது இளைஞர்களிடமிருந்து வாக்குகளைப்பெறுவதற்காக சிலர் அன்பளிப்பாக மதுபானம் வழங்கி பிரச்சாரம் முன்னெடுப்பது துரோக அரசியலின் உச்சகட்டமாகும் என்பதுடன், இவ்வாறான சமூகசீரழிவுச் சம்பவங்களை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

இளைஞர் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலிருந்தும் குறிப்பாக மலையகத்திலிருந்தும் போதைப்பொருட்களையும், மதுபானத்தையும் முற்றாக துடைத்தெறியவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது முன்னேற்றத்துக்கு ஏதோவொரு விதத்தில் இவை தடையாக இருக்கின்றன என்பது தெளிவு. குறிப்பாக உழைக்கும் பணத்தில் சிலர் பெரும் பகுதியை மதுபானத்துக்கு செலவிடும் அவலநிலையும் காணப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மதுவற்ற நாட்டை – மலையகத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள் பலர் இன்று முன்வந்துள்ளனர். எமது பெண்களும் இதற்கு முழு பங்களிப்பையும் வழங்கிவருகின்றனர். முன்னர் சாராய போத்தலையும், சாப்பாட்டு பார்சலையும்

வழங்கினால் வாக்குகளைப்பெற்றுவிடலாம் என்றதொரு நிலை இருந்தது என நினைத்துக்கொண்டு இன்றும் அவ்வாறு செய்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அந்த காலம் மலையேறிவிட்டது. எமது இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

எனினும், சில நயவஞ்சக அரசியல்வாதிகள், எப்படியாவது வாக்குகளைப்பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அன்பளிப்பாக சாராயம் வழங்கும் சதிகார வலையை விரித்துள்ளனர். ஆசை வார்க்தைகளைக்கூறி இளைஞர்களை எப்படியாவது அந்த வலைக்குள் வீழ்த்தி சாராயம் வழங்கியேனும் சாதித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இப்படியான அரசியலை நாம் வெறுக்கின்றோம். அதனை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு கைவிட்டால் நாம் வேட்பாளர் என்ற நிலையை மறந்து, அவர்களுக்காக வாக்குகேட்க தயாராக இருக்கின்றோம். ஏனெனில் எல்லாவற்றைவிடவும் மக்கள் நலம்தான் எமக்கு முக்கியம்.

சமூகத்தை சீரழித்துவிட்டு வாக்குகளைப்பெற முயற்சிப்பது அரசியல் அல்ல, அதற்கு வேறு பெயர் உள்ளது. இன்று நுவரெலியா மாவட்டத்தில் சந்திக்கு சந்தி சாராயக்கடைகள் உள்ளன. எமது சமூகம் முன்னேறக்கூடாது என்பதற்காக போடப்பட்ட தடைகளில் இந்த சாராயக்கடைகளும் ஒன்று. இதனை இளைஞரகளின் துணையுடன் மாற்றுவோம்.” – என்றார்.

பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் – வகுப்பு நேரங்களில் மாற்றம்!

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாலை 3.30 வரை கல்வி நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லையென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் – அரவிந்தகுமார்

தற்போதைய அரசாங்கம் இனவாத ஆட்சியையே முன்னெடுக்கின்றது. தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என கூறுகின்றது. அப்படியானால் எதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ. அரவிந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

பதுறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கேள்வியை எழுப்பினார்.

எமது மக்கள் மிகுந்த அமைதியாக இருந்து வருகின்றனர். இவ்வகையில் அமைதியாக இருந்து, அடுத்த மாதம் 5ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்திக்கு தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து, எமக்கும் விருப்பு வாக்குகளை வழங்கி வெற்றிபெற வைப்பார்கள்.

தற்போதைய காபந்து அரசு இனவாதத்தை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களினது வாக்குகள் எமக்குத் தேவையில்லையென்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட ரீதியில் போட்டியிடும் ஆட்சியாளர்களின் கட்சி வேட்பாளர்கள் தமிழ், முஸ்லிம் வாக்குகளைப்பெற பாரியமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, எமது மக்கள் சிந்தித்துச் செயல்படல் வேண்டும்.

கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். அதே 69 இலட்சம் பேரும் ஐக்கிய மக்கள் சக்திக்கே இம்முறை வாக்களிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

பதுளை நிருபர் – செல்வராஜா

PHI இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்..

தமது சங்கத்தின் செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘வடிவேல் சுரேஷ் இனி கட்சிமாற மாட்டார்’ – ஹரின்

” வடிவேல் சுரேஷ் இனி எம்மைவிட்டு வேறு எங்கும் செல்லமாட்டார். மலையகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பசறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் எமது கட்சி சின்னமான தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதன் பின்னர் எமது வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கவும். மூன்று விருப்பு வாக்குகளை வழங்கலாம். அதில் ஒன்றை கட்டாயம் வடிவேல் சுரேசுக்கு வழங்கவும்.

மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமை மிக்கதொரு நபராகவே அவர் இருந்து வருகின்றார். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கென  தமது உயிரையும் துச்சமாக நினைத்து செயல்படுபவராவார்.

அவர் இனிமேல் எம்மிடமிருந்து விலகிச்செல்லமாட்டார். தொடர்ந்தும் எம்முடனே இருப்பார். அத்துடன் மலையக மக்களுக்கு தலைமை தாங்கக் கூடிய வரும் அவரேயாகும்.” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

கொரோனா நோயாளி தப்பியோட்டம்! கண்டால் உடன் அறிவிக்கவும்!!

அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமை மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் முன்னிலை

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான விருப்பு வாக்கு பட்டியலில் ஜீவன் தொண்டமானே முதலிடம் பிடிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

பொதுத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமானுக்கு எட்டு திக்கில் இருந்தும் பேராதரவு பெருகிவருகின்றது.

மலையகத்தை மையமாகக்கொண்டியங்கும் சிவில் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகளும், வர்த்தக சமூகம், புத்திஜீவிகள் ஒன்றியம் மற்றும் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ஆகியன ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேறிய இ.தொ.கா. ஆதரவாளர்களும் மீண்டும் அந்தக் கட்சியில் இணைந்து, ஜீவனின் கரங்களைப்பலப்படுத்திவருகின்றனர்.

இவை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே விருப்பு வாக்குப் பட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிப்பார் என மலையக இளைஞர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரச்சாரக் கூட்டங்களில் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துவரும் வேட்பாளர்களுக்கு மத்தியில், திட்டங்களை முன்வைத்து, அவை தொடர்பில் விளக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றும் ஜீவனின் அரசியல் ‘ஸ்டைலானது’ மலையக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதுடன், புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கான ஆரம்ப புள்ளியாகவும் பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தென்னிலங்கையிலும், வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஜீவனின் அரசியல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டிவருகின்றனர். சிலர் தொலைபேசி ஊடாகவும், மேலும் சிலர் தமது செயலாளர்கள் ஊடாகவும் இந்த தகவலை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.

எனவே, மலையகத்துக்கு ஏற்றவிதத்திலான தலைமைத்துவமொன்றை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை ஜீவனின் கரங்களைப் பலப்படுத்தி மக்கள் தக்கவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசியல் நிபுணர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...