Home Blog Page 4047

அர்ச்சகருக்கு கொரோனா – திருப்பதியில் 15 நாட்களுக்கு ஊரடங்கு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஒன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

‘வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டெழுவோம்’ – ஜீவன் அழைப்பு

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியிருக்கின்றது. எனவே, குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனங்களை முன்வைக்காமல் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 20.07.2020 அன்று பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

” கொவிட் – 18 பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டும். ஒரு காலகட்டத்தில் எமது மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கினர்..

எனவே, தற்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்காது, சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி அத்துறையில் எவ்வாறு பயன்பெறலாம், எமது இளைஞர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

நாட்டில் எதிர்காலத்தில் மரக்கறி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகளவு மரக்கறி உற்பத்தி இடம்பெறுகின்றது. அப்போதும் எமக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இதற்கான களத்தை நாம் அமைத்துக்கொடுப்போம். மலையக பல்கலைக்கழகம் அமையும்போது, ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறியையும் கோரியுள்ளோம். பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக விவசாய கல்லூரியும் வரவேண்டும். இவ்வாறு தெளிவான திட்டங்களுடனும், மலையக தொடர்பான கனவுகளுடனுமே எமது பயணம் தொடர்கின்றது.

எம்மை விமர்சிப்பவர்கள் திட்டங்களை முன்வைப்பவில்லை. விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆரோக்கியமான விமர்சனங்களாக இருந்தால் ஏற்கலாம், ஆனால் இங்கு அர்த்தமற்ற விதத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீயா, நானா என்ற அரசியலாலேயே நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்.

எதற்கும் அஞ்சவேண்டாம், இருட்டபாத்து பயப்படாதீங்க, நிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும்.” – என்றார்.

‘கல்விப் புரட்சிமூலம் மலையகத்தில் மாற்றம்’ – தினேஷ்

கல்விப்புரட்சி மூலமே சமூக மாற்றம் என்ற இலக்கை எம்மால் இலகுவில் அடையக்கூடியதாக இருக்கும்.  எனவே, மலையகத்தில் கல்வித்துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலான யோசனைகளை முன்வைக்கவுள்ளேன் –என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் வேலாயுதம் தினேஷ்குமாருக்கு நாளுக்கு நாள் பேராதரவு பெருகிவருகின்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மக்கள் மத்தியில் சென்று பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் அவரால் முன்னெடுக்கப்படும் பிரச்சார யுக்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

நுவரெலியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், கல்வித் திட்டம் தொடர்பில் கூறியதாவது,

“ஜனநாயக வழியில் மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து துன்பங்களில் இருந்தும் எமது மக்களை விடுவித்து, எல்லா உரிமைகளையும் பெற்று எமது மக்கள் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எனது அரசியல் பயணத்தின் பிரதான இலக்காகும். எனது தந்தையும் இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கவே பாடுபட்டார்.

சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், கல்விப்புரட்சிமூலம் அதனை இலகுவில் அடைந்துவிடலாம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட விடயமாகும்.
எனவே, பாலர் வகுப்பு முதல் உயர்தரம்வரை எமது சிறார்கள் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்தினால் இடைவிலகல் குறைந்துவிடும்.

அத்துடன், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்களை வழங்குவதன் ஊடாக சிறுவயதில் அவர்கள் தொழிலுக்கு செல்வதை தடுத்து, கல்வியை தொடர்வதற்கான ஒரு உந்து சக்தியை வழங்கலாம்.
இந்தியா அரசாங்கம் தற்போது பல திட்டங்களின்கீழ் புலமைப்பரிசில்களை வழங்கிவருகின்றது. இலங்கை அரசாங்கமும் சில புலமைப்பரிசில்களை வழங்குகின்றன. எனினும், எமது பெருந்தோட்ட மக்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக நிதியமொன்று உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக உதவிகள் வழங்கப்படவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்மூலம் உதவிகளைப் பெறலாம்.

அதேவேளை, உயர்கல்வியின் பின்னர் தொழில்பயிற்சியை பெறுவதற்கான ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும்.  தற்போது இளைஞர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் இது விடயத்தில் எமது பணிகள் தொடரும்.

விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மேம்படுத்தப்படவேண்டும். அதேபோல் ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்களும் உருவாக்கப்படும்.

கல்வித்துறையில் புரட்சியை  ஏற்படுத்துவதற்கு மேலும் பல திட்டங்களும் உள்ளன. எமது ஆட்சியில் சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள விசேட செயலணியின் இதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும்.” – என்றார்.

‘கண்டியில் இம்முறை வரலாற்று சாதனை படைப்பார்கள் தமிழ் மக்கள்’

” ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கே தமது ஆதரவை வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே, எனது வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க மக்கள் ஒன்றுபட்டுவிட்டனர்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில் எமக்கு கடந்த நான்கரை வருடங்களில் தளம்பலற்ற செல்வாக்குநிலை தொடர்ந்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இதனை நிரூபித்தோம். கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் நாவலப்பிட்டிய, கம்பளை, பாத்ததும்பர மற்றும் பாத்த ஹேவாஹெட்ட ஆகிய நான்கு தொகுதிகளில் மாத்திரமே சஜித் வெற்றிபெற்றார்.

அத்தொகுதிகளில்தான் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, வெற்றிக்கான களத்தை முற்போக்கு கூட்டணியே எமது செயற்பாடுகள் ஊடாக அமைத்துக்கொடுத்தது. எமது செல்வாக்கு எப்படியுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

அதுமட்டுமல்ல கடந்த உள்ளாட்சிமன்றத்தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றோம். எமக்கென இன்று 11 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலிலும் எமக்கான மக்கள் செல்வாக்கு தொடரும் என்பது உறுதி. வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க அமைப்பாளர்கள் தீவிரமாக செயற்படவேண்டும்” -என்றார்.

அடாவடி அரசியல் நடத்துகின்றனர் – அஞ்சமாட்டோம் என்கிறார் பிரபு

அடாவடி மற்றும் பூச்சாண்டி அரசியலுக்கு நாம் அஞ்சமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இத்தேர்தல் ஊடாக மலையகத்தில் நிலையானதொரு மாற்றம் வரவேண்டும். அதனை செய்வதற்கு நாம் தயாராகிவருகின்றோம்.

ஆனால் இங்கு சிலர் அடாவடி அரசியல் நடத்துகின்றனர். பூச்சாண்டிகாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் நாம் அஞ்சமாட்டோம். இவர்கள் சொந்த தேவைகளுக்காகவே அரசியல் செய்கின்றனர். ஆனால், நாம் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம்.

நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசியப்பாடசாலை இல்லை. பல வருடங்களாக ஒரே கதையைத்தான் மீண்டும், மீண்டும் கூறிவருகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். ” – என்றார்.

13 பிளஸ் என்ற பேச்சுக்கு இடமே இல்லை – சஜித் திட்டவட்டம்!

“அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று ஒருபோதும் அதிகாரங்களைப் பகிரமாட்டோம். தற்போது அமுலில் உள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறை அவ்வாறே தொடரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.” –  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) திட்டவட்டமாக அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டிலுள்ள அனைத்து இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக நாட்டில் தீப்பிழப்புகளை உருவாக்குவது அல்ல ஆட்சியாளர்களின் கடமை. ஏதேனும் பிரச்சினை, முரண்பாடுகள் உருவாகவிருந்தால், அவற்றை தீர்த்துவைத்து, பாதகமான விளைவுகளை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதுதான் ஆட்சியாளர்களுக்கான கடப்பாடாகும்.

ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாம் அதிகாரங்களைப் பகிர்வோம். இதுவரையில் நடைமுறையில் இருந்ததை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எனவே, 13 பிளஸ்சும் இல்லை, 13 மைனசும் இல்லை என்பதை கூறியாகவேண்டும்.

வெளிநாடுகளுக்கு இராஜதந்திர பணயம் மேற்கொள்ளும்போது பிளஸ் என்றும், விமான நிலையம் திரும்பியதும் மைனஸ் என்றும்கூறும் அரசியலை நாம் முன்னெடுக்கமாட்டோம். எம்மிடம் உறுதியான நிலைப்பாடு உள்ளது. எனவே, எவருக்கும் வளைந்துக்கொடுக்காத எமது பயணம் தொடரும். தெளிவான அரசியல் மற்றும் ஆட்சிக்கொள்கை எம்மிடம் உள்ளது.” – என்றார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து அனைத்து கடற்படையினரும் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான அனைத்து கடற்படையினரும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில்   மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ராஜாங்கனை நோயாளியுடன் தொடர்புடையவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 

இன்றும் மழை பெய்யும் – மண்சரிவு எச்சரிக்கையும் நீடிப்பு!

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (21) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்   50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’ தாண்டவம் – ரி -20 உலகக்கிண்ண போட்டியும் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 20 ஓவர் உலக கிண்ண போட்டித்தொடர், கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி  முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் கோரதாண்டவம் ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பாராளுமன்றம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.

இத்தகைய சூழலில் 16 அணிகளை ஒரே சமயத்தில் வரவழைத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது என்பது சாத்தியல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து விட்டது.

இதனால் இந்த உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஐ.சி.சி. மூன்று முறை ஆலோசித்தும் உலக கோப்பை விவகாரத்தில் அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்தினர். இதன்பிரகாரமே போட்டித் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2021 ஒக்டோபர் முதல் நவம்பர் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

‘தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படகூடாது’

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் போதும். அதனைவிடவும் அதிகரித்தால் அரசியல் தலையீடுகள் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் மூவர் மாத்திரமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். கூட்ட நடப்பெண்ணும் மூன்றாக இருக்கின்றது. இதனால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” மூவர் இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டது. ஐவர் இருந்தால்கூட ஐவரும் இணைந்து முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நால்வர் முடிவெடுக்கும் நிலைமையை அனுமதிக்கமுடியாது.
உலகில் பிரபலமான நாடுகளில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே. அந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசியல் தலையீடுகளும் அதிகரிக்கும். மூவர் இணைந்து எடுக்கும் ஒருமித்த தீர்மானம்தான் முக்கியம். தொழில்நுட்ப வழியாககூட கூட்டங்களை நடத்தலாம்.” – என்றார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...

தன்னை கைது செய்ய தடை உத்தரவுகோரி கோட்டாபய மனு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன...