Home Blog Page 4052

வெளியானது விசேட வர்த்தமானி

பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்ததமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சுகாதார கட்டமைப்பைப் பின்பற்றுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இன்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை நகரில் சினிமாப்பாணியில் தங்க சங்கிலியை கொள்ளையடித்த மூவர் கைது!

பொகவந்தலாவை நகரிலுள்ள ஜுவல்லரியொன்றில் போலி சங்கிலியை வைத்துவிட்டு, தங்க சங்கிலியை கொள்ளையடித்துச்சென்ற மூவரை பொகவந்தலாவ பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.

நீர்க்கொழும்பு மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற காரும், அவர்கள் வசமிருந்த சில போலி நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை நகரிலுள்ள ஜுவல்லரியொன்றுக்கு இன்று (17) சென்ற நபரொருவர், தங்க சங்கிலி வாங்கவேண்டும் என கூறி, உள்ளவற்றை காட்டுமாறு கோரியுள்ளார்.

இதன்படி கடை உரிமையாளர்களும் தங்கசங்கிலிகளை காட்டியுள்ளனர். அவற்றில் ஒன்றை தெரிவுசெய்துவிட்டு, காரில் உள்ளவர்களுக்கு காண்பித்துவிட்டு வருகின்றேன் என கூறிய அவர், காரில் ஏறிய பின்னர் தப்பிச்சென்றுள்ளார். அத்துடன், குறித்த தங்க கடையில் போலியான சங்கிலியொன்றையும் விட்டுச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையர்களை துரத்திச்சென்ற பொலிஸார், ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியின் பெற்றோசோ சோதனை சாவடியில் வைத்து அவர்களை மடக்கிபிடித்தனர்.

காருக்குள் மூவர் இருந்துள்ளனர். அத்துடன், போலி நகைகளும், கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

திட்டமிட்ட அடிப்படையில் இக்குழுவினர் இவ்வாறு கொள்ளையடிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை நிருபர் – எஸ். சதீஸ்

‘பெருந்தோட்டப்பகுதிகளில் 28 வருடங்களில் 39,934 வீடுகள் மாத்திரமே நிர்மாணிப்பு’

பெருந்தோட்டப் பகுதிகளில் 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரையான 28 வருடங்களில், 39,934 வீடுகளே நிர்மாணிக்க ப்பட்டுள்ளன என்று, மனித அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வ.புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பெருந்தோட்டப் பகுதிகளில், நோர்வே அரசாங்கமும் டச்சு அரசாங்கமும் இணைந்து 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளன என்றும் மலையகத்தில் இதுவரை கட்டப்பட்ட வீடுகளில், ஆகக் கூடுதலான வீடுகளை
நோர்வே-டச்சு அரசாங்கமே நிர்மாணித்துள்ளன என்றும் தெரிவித்தார்.

“ ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 1,356 வீடுகளும் சமூக நலத்திட்டத்தினூடாக 3,900 வீடுகளும், ‘மாடி லயன்’ திட்டத்தின் கீழ் 735 வீடுகளும் அமைச்சினூடாக 4,021 வீடுகளும் புதிய வாழ்க்கை வீட்டுத்திட்டத்தின் கீழ் 1,132 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகள் 2018 ஆம் ஆண்டே முழுமைப்படுத்தப்பட்டன” என்றார்.

அத்துடன் வேல்ட்விஷன் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இணைந்து 72 வீடுகளை நிர்மாணித்துள்ளனஎன்றும் அமரர் பெ.சந்திரசேகரனின் காலத்தில் அமல்படுத்தப்பட்டசுயவீட்டுத் திட்டத்தின் கீழ் 5,281 வீடுகளும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் 338 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

‘கிரீன் கோல்ட் அவுசிங்’ திட்டத்தின் கீழ், 1,069 வீடுகளும் டவுன்சிப்வேலைத்திட்டத்தில் 113 வீடுகளும், இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 3,000 வீடுகளும், இதைத்தவிர இலங்கை அரசாங்கத்தால் 4,000 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதைத்தவிர 1,200 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே, பெருந்தோட்டத் பகுதிகளில் 28 வருடங்களில் 39,934 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றுத் தெரிவித்த அவர் பிரசார மேடைகளில் கூறப்படுவதைப் போன்று 50,000 வீடுகளோ 60,000 வீடுகளோ கட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியினர் 25,000 வீடுகளைக் கட்டியதாக பிரசார மேடைகளில் கூறித்திறிகின்றனர்.

அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 50,000 வீடுகளைக் கட்டியதாகக் கூறுகிறது.திகாம்பரம் 10,000 வீடுகளைக் கட்டியாதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் கூறுவதைப் பார்த்தால், மலையகத்தில் 85,000 வீடுகள் கட்டப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், 1992 முதல் மலையகத்தில், 39,934 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், 7,000 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி தமிழ் மிரர்

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ரிஷாட் மனு தாக்கல்

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரென்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, எனது தேர்தல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன். இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

என்னை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், நாடாளாவிய ரீதியில் எமது கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக “கொலொஸஸ்” நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை பற்றி விசாரிக்கவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரை அழைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

தனி வீட்டு திட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு திகா சாட்டையடி

மலையகத்துக்கான தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சாமிமலை, மாக்கொல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றியே மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எவ்வித பாகுபாடுமின்றியே வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால், வீடமைப்பு திட்டம் தொடர்பில் சிலர் வீண் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

தனது தாத்தாவும், அப்பாவும்தான் வீடமைப்பு திட்டத்தை கொண்டுவந்தனர் என ஒருவர் கூறுகிறார். சந்திரசேகரனின் பெயரையும் உச்சரிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்திரசேகரனின் பெயரை குறிப்பிடாதவர்கள் இன்று வாக்குகளுக்காக அவ்வாறு செய்கின்றனர்.

நில உரிமை தொடர்பில் கதைக்கின்றனர். நான் போராடாமலேயே எமது மக்களுக்கு நில உரிமையினை பெற்றுக்கொடுத்தேன். 80 வருடங்களாக ஒரு பேட்டைகூட அமைக்காதவர்கள், இனி கைத்தொழில் பேட்டைகள் கொண்டுவரப்போகின்றார்களாம்.

எதிர்வரும் 6 ஆம் திகதி நாமே வெற்றிபெறுவோம். நான் அமைச்சராவேன். மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.” – என்றார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஒருவாரம் காலக்கெடு’

மத்திய மாகாணத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு வார காலத்திற்குள் அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேயிலை சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்திகளை நிறுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வழங்கப்படக்கூடிய தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்று (2020.07.17) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது, மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் கூறியதாவது, உரிய சோதனையின்றி மத்திய மாகாணத்தில் 13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கு தேயிலை சபை நடவடிக்கை எடுத்துள்ளமையினால்  சுமார் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் இதுவரையில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இக்காரணத்தினால் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரினால் தேயிலை சங்கத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேபோன்று சட்டவிரோதமான முறையில் தேயிலை உற்பத்திகள் தொழிற்சாலைகளுக்குள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

‘மலையக மக்கள் எனது மக்கள் – அவர்களுக்கான சம்பள உயர்வை நான் தடுக்கவில்லை’

பெருந்தோட் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு எந்த இடத்திலும் நான் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” பெருந்தோட்ட தொழிலாலாளர்களுக்கு 750 ரூபா கிடைக்கின்றது. இத் தொகையுடன் இன்னும் 250 ரூபா சேர்த்து  கொடுப்பதற்கு நான் எங்குமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தப்படியால் கடந்த 2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது அமைச்சியின் கீழ் இயங்கும் தேயிலை சபை மூலம் 500 மில்லியன் ரூபா கடனாக பெற்றுக் கொடுத்தேன்.
அது மாத்திரமில்லாமல் 50 ரூபா பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் 600 மில்லியன் ரூபா ஒதுக்கினேன். அந்த வேளையின் போது நாட்டில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் ஆட்சி மாற்றதை சர்வாதிகாரமாக கொண்டுவந்ததால் அந்த பணம் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாமல் போய்விட்டது.இந்த விடயம் திகாம்பரத்திற்கும் நன்கு தெரியும்.
அரசியல் இலாபம் பெறுவதற்ககாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக திகாம்பரம் கூறி வருகின்றார்.
மலையக மக்கள் எனது மக்கள் அவர்கள் தமிழராக இருதாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எனது தொகுதி மக்கள் அவர்களுக்கு 250 ரூபா சம்பளம் அதிகரித்தால் நான் ஒரு பௌத்தன் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவேன்.
அத்தோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டமைப்பும் முதலாளிமார் சம்மேளனமும் செய்துக்கொள்ளும் கூட்டு ஒப்பந்தம் மூலமேசம்பள உயர் தீர்மானிக்கப்படும்.அந்த கூட்டு ஒப்பந்தத்தில் திகாம்பரம் இல்லை.
அவர் வேண்டுமானால் அவரின் தொழிற்சங்க அங்கத்தினரின் பலத்தை பயன்படுத்தி சட்ட ரீதீயாக இவ் ஒப்பந்தத்தில் இணைந்துக் கொள்ளலாம். நான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் . என முதலாளிமார் சம்மேளனத்திற்கு கோரிக்கை முன் வைத்தேன். கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
திகாம்பரம் அரசியல் இலாபம் தேடுவதற்காக என் மீது சேரு பூசுகின்றார். நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ளேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பீடம் என்னை இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளது. இதன்படி  எதிர்வரும் கூடுஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக சகோதர பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.என கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கைது!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன், ஹட்டன் பொலிஸாரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட கொடுக்க, வாங்கலொன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.

சிவநேசன் கைது செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சிவநேசன் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் என்பதுடன் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 7இல் களமிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கருத்து கணிப்பில் செந்தில் 80 வீதத்தால் முன்னிலை!

இம்முறைப் பொதுத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்து தமிழ் வேட்பாளர்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் செந்தில் தொண்டமான், முன்னிலையில் உள்ளார் என்று, கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது என ‘தமிழ்மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூக அபிவிருத்தி மன்றம், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், தமிழ் யூனியன், நாளைய மலையகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலேயே, செந்தில் தொண்டமான் முன்னிலையில் உள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சமூக அபிவிருத்தி மன்றம், கந்தேகெதரை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 15 தோட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 81 சதவீதமளவில் முன்னிலையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், ஒன்றியத்திலுள்ள 400 உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும், அவர் 81 சதவீதம் முன்னிலையிலுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் யூனியன் அமைப்பானது, தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்ட 1,476 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவீதத்தில் செந்தில் முன்னிலையிலுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில், நாளைய மலையகம் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 79 சதவீதமும் தொலைபேசிச் சின்னம் 12 சதவீதமும், யானைச் சின்னம் 6 சதவீதமும், மக்கள் விடுதலை முன்னணி 2 சதவீதமும், சுயேச்சை குழுக்கள் 1 சதவீதமும் பெற்றுள்ளன.

மலையக சகவாழ்வு சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 81.6 சதவீதமளவில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலுள்ளார். ” – என்றுள்ளது.

அதேவேளை, அரச புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட கருத்து கணிப்பிலும் செந்தில் தொண்டமானே முன்னிலை வகிப்பார் என தெரியவந்துள்ளது.

‘கொவிட் -19’ இலங்கையில் மேலும் ஐவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 05 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O12 ஆக அதிகரித்துள்ளது.

664  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக இருக்கின்றது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...