Home Blog Page 4053

பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எடுத்துள்ள முடிவு

‘கொரோனா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தமது தொழிற்சங்கம் இன்று மதியம் 12.30வுடன் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை முன்வைக்காதலால் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 82 லட்சத்து 85 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர். 50 லட்சத்து 75 ஆயிரத்து 383 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 900 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 92 ஆயிரத்து 778 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

‘வாக்களிக்க விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பில் முறையிடவும்’

வாக்களிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விடுமுறை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவு, குறித்த முறைப்பாடுகளை ஏற்குமென அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (17.07.2020) அறிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வாக்குரிமையை மீறுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஒரு பாரதூரமான நிலையென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப விடுமுறையை பெற்றுக்கொள்வது ஊழியர்களின் உரிமையென குறிப்பிட்டுள்ள அஹமட் மனாஸ், அதற்கேற்ப நிறுவனங்களின் தலைவர்கள் தமது ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டுமென  சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில், விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கஃபே அமைப்பு செயற்படுவதாகவும், ஆகவே அவ்வாறான முறைப்பாடுகளை 0114341524 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 0112866224 என்ற தொலைநகல் (FAX) இலக்கத்தின் ஊடாக அல்லது info@caffesrilanka.org மின்னஞ்சல் ஊடாக கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு அஹமட் மனாஸ் மக்கீன் கோரியுள்ளார்.

‘மலையக சமுகமாற்றத்துக்கான திட்டங்கள் முன்வைக்கப்படும்’

” பெருந்தொட்டத்  தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்க்கலாம் என்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய பொறிமுறையை தயாரித்துவருகின்றோம்.”. –  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் வேலாயுதம் தினேஷ் குமார், மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகத்தில் வாழும் மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு விசேட செயலணியொன்று அமைக்கப்படும் என்றும், பிரதமரின் நேரடி கண்காணிப்பின்கீழ் அது இயங்கும் என்றும் எனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை வரவேற்பதுடன், அந்த செயலணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். அதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

அட…! இவர்களால் தேர்தலில் வெற்றிபெறமுடியாது, பிறகு எப்படி செயலணி அமைப்பது என சிலர் கொக்கரிக்கலாம். ஆனால், இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது.  எனவே, சஜித் தலைமையில் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். நுவரெலியா மாவட்டத்திலும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்வோம்.

குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்தேன். தற்போது பிரச்சாரத்துக்கு சென்றால்கூட மக்களின் கருத்துகளை கோரிவருகின்றேன். இதற்கமைய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் எவ்வாறு பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை விசேட செயலணியிடம் கையளிப்பேன்.

அவற்றை செயல்படுத்துவதற்கு அழுத்தமும் கொடுப்பேன்.
சிலவேளை, மாற்று தரப்புக்கு மக்கள் ஆணைவழங்கினால்கூட ஜனாதிபதியிடம் குறித்த திட்டம் கையளிக்கப்படும்.

குளவி தாக்குதல், தொழில் பாதுகாப்பு, நியாயமான சம்பளம், சுகாதார மேம்பாடு  உட்பட சில விடயங்களை குறுகிய காலத்துக்குள் தீர்க்கலாம். இப்படி மூன்று கட்டத்துக்குள் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமான அதற்கான பொறிமுறை தயாரிக்கப்படும்.

 எனவே, தூரநோக்கு சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் எம்மிடம் உள்ளது. சமுக மாற்றத்துக்காக எமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும்.” – என்றார்

‘நல்லாட்சியில் மலையகம் புறக்கணிப்பு’

மலையகத்தில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் எத்தனை வீடுகளை மக்களுக்கு கையளித்தது – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மலையக இளைஞர்களுக்கு எத்தனை அரச வேலைவாய்ப்புகளை வழங்கினார்கள்? அரச வேலைவாய்ப்புகளில் மலையக இளைஞர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர், எவ்விதமான காத்திரமான அபிவிருத்திகளும் மலையகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படியிருக்கையில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையில் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

‘தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணம் இல்லை’ – மொட்டு கட்சி

பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம்மீதும், சுகாதார அமைச்சர்மீதும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டிவருகின்றார். மறுபுறத்தில் திசைதெரியாமல் தேசிய மக்கள் சக்தியின் பயணம் தொடர்கின்றது. தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமையும் என விமர்சிக்கின்றனர்.

ஆனால் நாம் தேசிய அரசு அமைக்கமாட்டோம். அதற்கான தேவையும் ஏற்படாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே எமது இலக்காக இருக்கின்றது. அதற்கேற்ற வகையிலேயே வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவோம். எமது அணியின் பங்களிப்புடன் ஆட்சியமைப்போம்.

அதேவேளை, கொரோனா 2ஆவது அலை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். கத்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொத்தணி பரவலே ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவோம்.” – என்றார்.

‘கிளங்கன் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவோருக்கு பெரும் சிரமம்’

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் கிழமை நாட்களில் கிளினிக் வைத்திய பரிசோதனைகளுக்கு வருவோர் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களின் வைத்திய சேவைக்காக நிர்மாணிக்கப்பட்டதே கிளங்கன் ஆதார வைத்திய சேவையாகும். இருப்பினும் இவ் வைத்தியசாலையில் மக்கள் பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வைத்திய பரிசோதனைக்காக விடியற்காலை 4.00 மணிக்கு வந்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்கமும் தங்களுடைய வைத்திய பரிசோதனைகளுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்திய பரிசோதனையின் போது இடம்பெறும் கெடுபிடிகளால் உரிய முறையில் வைத்திய பரிசோதனைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கவலைத்தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையின் சுற்றுபுறத்தில் துர்நாற்றம் வீசுவதால் நீண்ட நேரம் இருக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆதலால் தாம் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் ஜீவனுக்கு பெருகிவரும் பேராதரவு! வர்த்தக சமுகமும் சங்கமம்!!

மலையகத்தில் மாற்றத்தையும் – மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய அத்தனை தலைமைத்துவ பண்புகளும் ஜீவன் தொண்டமானிடம் இருக்கின்றன என்றும், எனவே, அவரின் வீறுகொண்ட அரசியல் பயணத்துக்கு மலையக மக்கள் முழு ஆதரவையும் வழங்கவேண்டும் என்றும் மலையக வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அறிவிப்புகளானவை, எதிர்கால மலையகம் சிறப்பாகவும், வளம்மிக்கதாகவும் இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் வேங்கைவேகத்தில் ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு எட்டுதிக்கிலும் பேராதாவு பெருகிவருகின்றது. இந்நிலையில் மலையகத்திலுள்ள பல வர்த்தக அமைப்புகள் அவருடன் கைகோர்த்துள்ளன. குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களும் தமது பூரண ஆதரவை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.

எதற்காக ஜீவனுக்கு இந்த ஆதரவு என்பதை தெளிவுபடுத்திய வர்த்தகர்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு,

” மலையக சமுகம் தொடர்ந்தும் பின்னடையாக இருப்பதற்கான காரணங்களை ஜீவன் தொண்டமான் அடையாளம் கண்டுள்ளார் என்பதை அவரின் உரைகள் உணர்த்துகின்றன. அத்துடன், அத்தடைகளை எவ்வாறு தகர்க்கலாம் என்பதற்கான திட்டங்களையும், யோசனைகளையும் அவர் முன்வைத்துவருகின்றார். ஆக, அவரது அரசியல் பயணத்தில் தூரநோக்கு சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும்  இருப்பதை காணமுடிகின்றது.

அதுமட்டுமல்ல  மலையகத்துக்கு எவ்வாறானதொரு தலைமைத்துவம் வேண்டுமோ – அதற்கேற்ற வகையில் தன்னை செலுக்கும் பொறுப்பு என் சொந்தங்களான மலையக மக்களுக்கு இருப்பதாக ஜீவன் அறிவித்துள்ளமை, காங்கிரசுக்கும்,  மக்களுக்குமிடையில் உள்ள நெருக்கமான உறவை பிரதிபலிக்கின்றது என்பதுடன், தான் மக்களுக்கான அரசியலையே நடத்தப்போகின்றேன் என்ற உத்தரவாதத்தையும் ஜீவன் இதன்மூலம் வழங்கியுள்ளார்.

இப்படியான வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆகவே, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியம், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரம் ஆகியவற்றுடன் புத்தாக்க சிந்தனைகளையும் உள்வாங்கி, புதுயுகம் நோக்கி மலையக சமுகத்தை ஜீவன்  தொண்டமான் அழைத்துசெல்வார் என்பதை அவரின் செயற்பாடுகள் உறுதிப்படுத்திவிட்டன. இதன்காரணமாகவே மாற்றத்தின் பங்காளிகளாக நாமும் இணைந்துள்ளோம்.

தற்போது தபால்மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்திலுள்ள பல அரச ஊழியர்கள் இ.தொ.கா. வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடும்போது இந்த விடயம் தெரியவந்தது. இனிவரும் நாட்களிலும் அரச ஊழியர்கள் பேராதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.

கட்சி செயலாளர்களை இன்று சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்  ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) நடைபெறவுள்ளது.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலும் அதற்கான வழிமுறைகள் சம்பந்தமாகவும்  இதன்போது ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சில  பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் பட்சத்தில், அப்பகுதி முடக்கப்டுமானால்  அப்பகுதிகளுக்கு பிரிதொரு நாளில் தேர்தல் நடத்தப்படும். ஆனால், அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என நம்புகின்றோம் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தும் பெரும்பான்மையினர் – ஆனந்தகுமார் ஆவேசம்

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தனது கள பிரசார நடவடிக்கைகளை இன்று அதிரடியாக ஆரம்பித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமார், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

பனில்கந்த பகுதி மக்களுக்கு இதுவரை எந்தவித தீர்வையும் வழங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தவறிவிட்டதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில், தமக்கான குரலாக பிரதிநிதியொருவர் வருகைத்தந்ததை வரவேற்ற பனில்கந்த மக்கள், தமக்கான பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த எஸ்.ஆனந்தகுமார், தீர்வு திட்டங்கள் நிறைவேற்றப்படும் விதத்தையும் மக்களுக்கு தெளிவூட்டியிருந்தார்.

இதையடுத்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய எஸ்.ஆனந்தகுமார், பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை தான் உறுதி செய்வதாக கூறினார்.

பல தசாப்த காலமாக தாம் விளையாடிய மைதானத்தை தற்போது பெரும்பான்மை சமூகம் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மைதானத்தில் பெரும்பான்மை சமூகம் மரக்கன்றுகளை நட்டு, தமது மைதானத்தை கையகப்படுத்தி கொண்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், லயின் வீட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் மக்கள் எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல எஸ்.ஆனந்தகுமார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிகாரிகள் பெரும்பான்மை சமூகத்திற்கு ஆதரவாக கருத்துரைக்க ஆரம்பித்த நிலையில், எஸ்.ஆனந்தகுமார் அவேசப்பட்டு அதிகாரிகளை உரிய முறையில் செயற்படுமாறு வலியுறுத்தியிருந்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டாம் என கூறிய அவர், தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உரிமைகளை இழந்த தமிழ் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் மக்களின் பின்புலத்தில் என்றும் தான் இருப்பதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...