Home Blog Page 4054

தமிழ் மக்களின் மனங்களை நிச்சயம் வெல்வோம் – நாமல்

” போரில் இருந்து வடக்கை மீட்டுவிட்டோம். அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்தும் வடக்கை மீட்டெடுக்கவேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கும் இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் பொறுமைகாப்போம். ஆனால், நம்பிக்கையை பெறுவதற்கான போராட்டத்தை கைவிடமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் வடக்குக்கு சென்றுவருகின்றீர்கள். இளைஞர்களை சந்திக்கின்றார். அப்படி இருந்தும் ஏன் இன்னும் அங்கு வாழும் இளைஞர்களின் ஆதரவை பெறமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“தெற்கு இளைஞர்களுக்கு இணையானவர்களே வடக்கு இளைஞர்களும். அவர்களிடம் நான் வித்தியாசத்தை காணவில்லை. தேசிய கட்சியொன்றுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை முதலில் நாம் அவர்களுக்கு வழங்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலின்போது மாத்திரமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வாக்குகளை பெற முயற்சிக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவும், சஜித் பிரேமதாசவும் அவ்வாறே வாக்குகளைப்பெற்றனர்.

எமக்கு 6 அல்லது 8 வீதம் கிடைத்தாலும் பரவாயில்லை, தனிவழியில் செல்லவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றோம். எனவே, தேசிய நீரோட்டத்துக்குள் சங்கமிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும். வாக்கு கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியை கைவிடக்கூடாது.

உதாரணமாக ஜே.வி.பி இளைஞர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொன்றது. அவ்வாறு செய்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் இணைவதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இருதரப்புகளும் இணைந்துசெயற்படவில்லை எனக்கூறமுடியாது. கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே ஜே.வி.பி. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர்.

2 ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க. பக்கம் நின்றனர். ஆனாலும் இதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. எமது அரசியல் பயணத்துக்கு வடக்கு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு 30 ஆண்டுகள் எடுக்கும் என நாம் கூறவில்லை. அதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக டயஸ்போராக்கல் இன்னும் தனி நாட்டுக்காக குரல் எழும்பும் நிலையிலும்,, தெற்கிலுள்ள தேசிய கட்சி வடக்கில் அரசியல் செய்யாத நிலையிலும்கூட எமக்கு 10 வீத வாக்ககள் கிடைக்கின்றது. எனவே, வடக்கை கைவிடவேண்டாம் என தெற்கிலுள்ள கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இனரீதியிலான அரசியல் இருக்கவில்லை. தேசிய அரசியலே அங்கு முன்னெடுக்கப்பட்டது. எனவே, தேசிய நீரோட்டத்தில் அவர்களை சங்கமிக்கவைப்பதற்கு வாய்ப்பு வழங்கவேண்டும். எனவே, வடக்கு அரசியலை கைவிடவேண்டாம் என கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

‘கணவன் எனக்கூறி கள்ள காதலனை கொரோனா முகாமில் தங்க வைத்த பெண் பொலிஸ் அதிகாரி’

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஏற்கனவே திருமணம் ஆன நபரை தன் கணவர் என கூறி கொரோனா தடுப்பு மையத்தில் தன்னுடன் தங்க வைத்து நாடகம் ஆடி உள்ளார்.

இந்தியாவின், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து காவல்துறையினரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சில பொலிஸ் அதிகாரிகள் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையில் வேலை பார்த்து வந்த ஒருவரை அழைத்து வந்து கொரோனா தடுப்பு முகாமில் பெண்  தனிமைப்படுத்தினர்.

இதற்கிடையில், பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவருக்கு கொரோனா உள்ளது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் பொலிஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை மீட்டுத்தரவேண்டும் எனவும்  மனு கொண்டுத்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரிக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஆண்டு நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியின் போது பெண் பொலிசுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர் அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தனது கணவர் பெண் பொலிசுடன், தனியாக குடும்பம் நடத்தி வந்தது அந்த நபரின் மனைவிக்கு தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தையடுத்து பெண் பொலிஸ் அதிகாரியும், அவரது ரகசிய காதலனும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

‘வாக்கு உங்கள் பலம் – மலையக எதிர்காலத்துக்காக அதனை பயன்படுத்தவும்’

பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்று, சஜித் பிரேமதாச பிரதமரானால் மாத்திரமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித்தான். அவர் பிரதமரானால் மாத்திரமே நம்மால் நிம்மதியாக வாழமுடியும்.

தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்ட ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் என தொடர்ச்சியாக கூறிவருகின்றேன். எமது சங்கத்துக்கும் அப்படியானவர்தான் தலைவராக வருவார். நான் தோட்டத்தில் பிறந்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, வளர்ந்தவன்.

வாக்கு என்ற பலம் உங்களிடம் உள்ளது. அந்த பலம்தான் மலையகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது. எனவே, சேவை செய்யக்கூடியவர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

 

சொற் சமர் உக்கிரம்!திகாவுக்கு பதிலடி கொடுத்தார் பிரபு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான முத்தையா பிரபுவுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரத்துக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது.

பிரச்சார மேடைகளில் இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

முத்தையா பிரபுவை, பரசூட் வேட்பாளர் என்றும், பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வாக்கு கேட்கும் அவருக்கு, மக்கள் வாக்களிக்ககூடாது என திகாம்பரம் பிரச்சாரம் முன்னெடுத்துவருகிறார்.

மறுபுறத்தில் திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது ஆமை வேகத்திலேயே வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும், மலையக மக்களுக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை எனவும் முத்தையா பிரபு பதிலடி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட முத்தையா பிரபு,

” நான் பெட்,போல் வழங்கி பிரச்சாரம் முன்னெடுப்பதற்கா திகாம்பரம் கூறுகிறார். அவர்தான் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்கிறார். அவர் ஒன்றும் செய்யாததாலேயே எம்மால் செய்யவேண்டியுள்ளது.” – என்றார்.

‘அண்டா’ அரசியல் நடத்தும் கலாநிதியை கைகட்டி நிற்கவைப்பேன் – அனுசா சபதம்

” உருளைக்கிழங்கு பயிரிட்டு லாபம் பெருவதற்கோ குடிநீரை விவசாயத்துக்குக் களவாடுவதற்கோ அல்லது கிடைக்கும் சிற்றூழியர்கள் நியமனத்தை லட்சக்கணக்கில் விற்பதோடு அண்டாவையும் குண்டாவையும் கொடுத்து சேவையென புகழ்ச்சியடைவதற்காகவோ நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

மெராயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின்போது, இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மலையக இளைய தலைமுறையினரின் அடையாளத்துக்காகவும் இன்னும் 10 வருடங்களில் எம் சமூகம் அதற்குறிய அடையாளங்களுடனும் வாழ வேண்டுமென்ற நோக்கத்துடனேயே நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் மலையகத்தின் ஒரே ஒரு பெண்ணாக துணிந்து களமிறங்கியள்ளேன்.

பணமும் பந்தாவும் அரசாங்க நிதி ஒதுக்கீடும்தான் முக்கியமென்று என் தந்தை அரசியலில் இறங்கவில்லை கோடி கோடியாக சம்பாதித்து சொத்துக்கள் குவித்திருக்கும் நிலையை என் பாட்டனார் என் தந்தைக்கு விட்டுச்சென்றிருந்தார் – ஆனால் தன் சொத்துக்களை மட்டுமல்ல தனது இளமைக்காலம் முழவதையும் என் தந்தை நம் சமூக செயற்பாடுகளில் முற்றாக இழந்தார். தந்தையாகி எம்மைவிட்டு வருடக்கணக்கில் சிறையில் இருந்தார்.

இன்று சம்பாதிப்பதுதான் எனது நோக்கமென்றால் ஒரு சட்டத்தரணியாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஆனால் அது என் தந்தைக்கும் அவரை நம்பிய விசுவாசிகளுக்கும் ஏன் எனக்கு நானே செய்துக் கொள்ளும் துரோகமாகவே அமையும்.

ஆகவே தான் என் தந்தையின் அடையாளத்துக்காக களத்தில் இறங்கியுள்ளேன். எத்தனை வியாபாரிகள் வந்து தடுத்தாலும் என் பயணத்தை நிறுத்த முடியாது.
எத்தனை அல்லக்கைகலாலும் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.
ஓய்வெடுக்க வேண்டியவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளைக் கண்டு நான் ஒரு போதும் ஓடி ஒழிய மாட்டேன். ஒரு பெண்ணுடன் மோதும் பணமுதலைகளைக் கண்டு பின் வாங்க மாட்டேன்.

எல்லா பெண்களிடமும் தன் பலவீனத்தை காட்டுவது போல இந்த வீரனின் மகளிடம் விளையாட்டு காட்ட முற்பட்டால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை கற்பிப்பேன்.  என்னுடன் கருத்து ரீதியாக மோதமுடியாத கலாநிதிகள் நிச்சயம் என்முன் கைகட்டி நிற்கச்செய்வேன் என்றும் கூறினார்.

‘கொரோனா’வால் தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா – ஐ.தே.க.!

“கொவிட்- 19 தொற்றின் பாதிப்பாக ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்டோர்தொழில்களை இழக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொழில் இழந்த சகலருக்கும் 10000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழில்களை இழந்து நாடு திரும்புவோருக்கும்  இந்த நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பல தலைப்புகளின்கீழ் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘பிரச்சினைகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் திட்டம்’ எனும் தலைப்பின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

பொருளாதார நெருக்கடிகளால் சிரமப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அவர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுயதொழில் வருமானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழில் இழந்தவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இணையான வருமான வழிகளை உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கத் தொழிலில் இடைநிறுத்தப்பட்டுள்ள சகல கொடுப்பனவுகளும் மீள வழங்கப்படும்.

என்டர்பிறைசஸ் ஸ்ரீ லங்கா யோசனை முறைமையின் கீழ் 50 மில்லியனுக்கு குறைந்த கடன் பெற்றவர்களுக்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான சலுகைக்காலம் வழங்கப்படும்.

சமூகத்தில் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு 10000 ரூபாய்க் கொடுப்பனவு வழங்கப்படும்.

இலங்கையில் சகல தொழில்முயற்சியாண்மைகளும் பாதுகாக்கப்படும். அதற்காக வர்த்தக சந்தையில் காத்திரமான செயற்றிட்டங்கள் மற்றும் ஆபத்தான நிதி செயற்றிட்டங்கள் ஆகியன சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக தனியார் துறைகளுக்கு வழங்கப்பட்டு நிதி பெற்றுக்கொள்ளப்படும்.

கொவிட்-19 ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண செயற்திட்டம், அத்தகைய சமாந்தரமான செயற்திட்டம் ஊடாக ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஊடாக தனியார் வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படும்.

இந்த நிதியங்கள் மற்றும் செயற்திட்டம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், சிறு தொழில ;முனைவோர்கள் மற்றும் சுயதொழில் தொழில்முனைவோர்களை பலமாக்குவோம். அதற்கான நிதி உதவிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கு நீண்ட கால அரச பிணை முறிகளை அந்த தொழில்முனைவோர்களுக்கு வழங்குவோம்.” என்றுள்ளது.

இப்படி மேலும் பல திட்டங்களும் உள்ளன.

‘கொரோனா’ வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்போம்’ – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (2020.07.16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் ,

கொவிட் தொற்று முதன் முதலாக வந்தபோது அதனை கட்டுப்படுத்த முடியுமானதாயிற்று. கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழு, அத்தியவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு, அரச துறை, சுகாதார துறை, இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். விசேடமாக உளவுத்துறை மற்றும் சுகாதார துறை ஆகியன செய்த அர்ப்பணிப்பை இங்கு நிச்சயம் நினைவுகூற வேண்டும்.

இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்து வருகின்றனர், அது தொடர்பாக உங்களது இங்கு நிபுணர்கள் தெளிவுபடுத்துவர். நாங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்தவர்கள். அதனால் எதிர்காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேர்தல் காலம் என்பதால் கொரோனா இரண்டாவது அலை நிலவிவருகிறது என தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் பீதியில் உள்ள நிலையில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தாது செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும்.

ஊடகவியலாளர்: சுகாதார ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடாமை தேர்தலுக்கு இடையூறாகக்கூடும் என தேர்தல் ஆணையாளர் கூறுகின்றார்.

பிரதமர் – உண்மையில் அந்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட் வருகிறது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி – தேர்தல் குறித்த ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிட தயார். நாளை அல்லது நாளை மறுதினம் வர்த்தமானி வெளியிடப்படும்.

ஊடகவியலாளர் – தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் மாத்திரமா? வர்த்தமானியில் வெளியிடப்படும்.

சுகாதார அமைச்சர் – தேர்தல் ஆணையம் முதன்மையான ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரியுள்ளது. தேர்தல் ஆணையம் கோரியுள்ள தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தேவையான சுகாதார ஆலோசனைகள் அனைத்தையும்

வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம். தேர்தல் ஆணையம் எழுத்து மூலமாக கோரியுள்ள ஒழுங்குவிதிகள்  நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரும் அறிவித்துள்ளார். எனவே அதற்கு நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.

ஊடகவியலாளர் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை நிறுத்தினாலும், கொரோனா நிலைமையுடன் தேர்தல் கூட்டங்களை நடத்துவது அபாயமானது தானே.

பிரதமர் – சமூகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பில் தோன்றிய பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை மூன்று தினங்களுக்கு நிறுத்தியது. சுகாதார சட்ட விதிகளை கடைப்பிடித்து நாம் இன்று முதல் மீண்டும் தேர்தல் கூட்டங்களை ஆரம்பிக்கின்றோம்.

ஊடகவியலாளர் – சில சில மாகாணங்களை முடக்குவதற்கான அவசியம் உள்ள போதிலும், தேர்தல் காரணமாக, அந்த பிரதேசங்களை முடக்காதிருப்பதாக குற்றச்சாட்டொன்று அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் – நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை.

‘இந்தியாவிலிருந்து மலையகத்துக்கு ஆசிரியர்கள்’

தபால்மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதை காணமுடிகின்றது. தபால்மூல வாக்குகள்தான் வெற்றிபெறும் தரப்பை ஆரம்பத்தில் தீர்மானிக்கும். எனவே, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிப்பயணம் அரம்பித்துவிட்டது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் டிக்கோயா பகுதியில் இன்று (16) மதியம் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையகத்தில் நாம் கணித, விஞ்ஞான பாடசாலைகளை உருவாக்கினோம். அனைத்து பௌதீக வளங்களையும் கொடுத்தோம். ஆனால், சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது. எனவே,  கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்ககூடிய 100 ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து வரவழைப்போம் என நான் யோசனை முன்வைத்திருந்தேன். பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தன. இதனால் திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய ஆசிரியர்களை வரவழைக்ககூடியதாக இருந்தால் அதனை நிச்சயம் செய்வோம். அவ்வாறு இல்லாவிட்டால் இங்குள்ளவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படவேண்டும். நான் மாகாணசபையில் இருக்கும்போது இவ்வாறான பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை., சர்வமத தலைவர்களிடமும் ஆசியும் ஆதரவும் திரட்டி வருகின்றோம். நான் இந்து சமயத்துக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளேன். எதிர்காலத்திலும் ஆற்றுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

5 ஆம் திகதிக்கு பிறகு நானே அமைச்சர் – அரவிந்தகுமார் சூளுரை

” எதிர்வரும் 5ஆம்  திகதி நடைபெறவுள்ள தேர்தலில்,  ஐக்கிய மக்கள் சக்தி அமோகமாக வெற்றியடைந்து பலம் பொருந்திய ஆட்சியை அமைப்பதுடன், பதுளை மாவட்டத்தில் நானும், தம்பி வடிவேல் சுரேசும் பாரிய வெற்றியையும் ஈட்டுவோம். அவ் வெற்றியின் அடிப்படையில், நான் அமைச்சு பதவியைப் பெற்று, அப்பதவியுடனேயே மீண்டும் எமது மக்களை சந்திப்பேன்.”

இவ்வாறு பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

ஹப்புத்தளைப் பகுதியின்இ சர்வட்டி குறிஞ்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மூன்றலில்  (இன்று) 16.07.2020ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த நான்கு வருடங்களில் நான் எமது மக்களுக்கு ஆற்றிய சேவைகளை 24 பக்கங்களைக் கொண்ட விபரக்கொத்தினை பத்திரிகை வடிவில் தயாரித்து, எமது மக்களிடம் சமர்ப்பித்திருக்கின்றேன்.  அந்த நான்கு வருடங்களில் எனக்கு அரசினால் கிடைக்கப்பெற்ற நான்கு கோடி ரூபா நிதி உள்ளிட்ட எனது முயற்சிகளினால் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபா நிதியுடன், பல கோடி ரூபா நிதியில் எமது மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன்.
அச் சேவைகளின் தொகுப்பினை மக்களிடம் வழங்கியுள்ளேன். அதனை எமது மக்கள் பார்வையிட்டுக் கொள்ள முடியும்.  அந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக நான் ஆற்றிய மக்கள் சேவைகள் குறித்த தொகுப்பினைப் பார்த்த எமது மக்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்துள்ளனர். அதனை எமது மக்களே நேரடியாக என்னிடம் கூறி வருகின்றனர்.
மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கமைய பாரிய சேவைகளையாற்றிவிட்டே மீண்டும் ஆணையைப் பெற மக்களிடம் வந்துள்ளேன். எனது சேவைகளை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன். இதற்காகவே எமது மக்களிடம் மீளவும் வந்திருக்கின்றேன்.
ஆகவே,  எமது மக்கள் தொழிற்சங்க, அரசியல் பேதங்களுக்கப்பால்,  சமூக ரீதியில் ஒன்றிணைந்து  எனது வெற்றியை உறுதிப்படுத்துவார்களென்ற பாரிய நம்பிக்கை எனக்குண்டு.
என்னை பொறுத்தவரையில் எனது மனசாட்சிக்கு விரோதமாக நான் எதனையும் செய்யவில்லை. சுயநலம் மற்றும் தன்னலம் என்பது என்னிடம் கிடையாது. எனது குடும்ப நலன்கள் குறித்து சிந்தித்ததும் கிடையாது. 24 மணித்தியாலயங்களும் மக்களைப் பற்றிய சிந்தனையுடனேயே, நான் இருந்து வருகின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றேன்.
இத்தேர்தல் முக்கியமானதொரு தேர்தலாகும். எமது சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகும். எமது பிரதிநிதித்துவங்கள் மக்கள் மன்றங்களில் இல்லாது போனால், நாம் அரசியல் அனாதைகளாகிவிடுவோம். ஆகவே எமது மக்கள் கிரமமாகவும், முறையாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் அறுவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 06 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,OO7 ஆக அதிகரித்துள்ளது.

656  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக இருக்கின்றது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...