இன்றைய மின்வெட்டு அட்டவணை
இன்று (04) 02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி , ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே,...
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து
சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தொழில் மற்றும்...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு புதிய செயலாளர் நியமனம் எப்போது?
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான புதிய பொதுச்செயலாளரை விரைவில் நியமிக்குமாறு மலையக மக்கள் முன்னணி, கூட்டணியின் அரசியல் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளராக...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய App
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்போது இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை மற்றும் காணி...
தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி செயலர் தலைமையில் உபகுழு
ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தேசிய கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக தலைமையில் உப குழுவொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர...
பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம்
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பகிடிவதைகளை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரங்களில் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை சீர்குலைக்கும் தரப்பினர் மற்றும் வேலைத்திட்டங்கள் இருக்குமாயின்...
வாகனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது குறித்து பொது நிறுவனங்களுக்கான...
வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
2021 க.பொ.த. உயர் தர...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி அறிமுகம்
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயலின் திட்டமாக சுற்றுலாப் பயணிகளின்...












