2029 இல் நாமலே ஜனாதிபதி: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா சூளுரை!
" 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி. அவருடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்ற...
“இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை” சீன நிறுவனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company - CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று...
இலங்கை வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழு
சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில்...
இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி இல்லை: ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்!
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தியில் இல்லை.” - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.
சமகால அரசியல்...
அன்று தேர்தலை ஒத்திவைத்ததால்தான் மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பினர்!
மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாத காரணத்தாலேயே கடந்த காலங்களில் மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்றும், எனவே கடந்த காலத் தவறுகளில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்வது அவசியம்...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: 17ஆம் திகதி நீதி அமைச்சர் நேரில் விஜயம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி வழங்குவதில் தற்போதைய அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், இது குறித்து நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம்...
செம்மணியில் இதுவரை 353 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதன்போது,...
சங்கீத்ஷனுக்கு எதிராக சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு விலக்கல்!
பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்விவகாரத்தை ஒட்டிய வழக்கு இன்று மூன்று...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க குழு !
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக,
I....
“கல்வி மறுசீரமைப்பு” – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை...













