பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை , சபாநாயகருக்கு...
‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு...
எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் தனியார் பஸ் சேவைகள் முடக்கம்! இ.போ.ச. பஸ்களில் தொங்கி பயணம்!!
எரிபொருள் நெருக்கடியால், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் பேருந்துகள் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை. இ.போ.ச. பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் பஸ்களில், அளவுக்கு...
சிங்கப்பூரில் தரையிறங்கிய ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு
சிலாபம் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்து விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முன்னேஸ்வரம் வீதியின் கால்வாயில் இருந்து அவரது சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக...
நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது- சபாநாயகர்
நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார்.
மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (15) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாளைக்கு பிறகு மீண்டும் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று...
ரணிலின் இடத்துக்கு ருவான் விஜேவர்தன நியமனம்?
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள தகவலை ஐ.தே.கவின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன நிராகரித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பியாக ருவான் விஜேவர்தன நியமிக்கப்படுவார்...
வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும்- இராணுவம்
இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...













