தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்சியும் சவால் அல்ல
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ 1350 இன்று வழங்கப்படுகிறது!
தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது!
கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட...
தமிழரசு இன்று வேட்புமனு தாக்கல்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதேவேளை, வன்னி, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இறுதியாகிவிட்டது என்றும், மட்டக்களப்பு, திருகோணமலை...
தமிழரசின் அதிருப்திக் குழு யாழில் தனித்துப் போட்டி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளனர் என்று அறியமுடிகின்றது. ஜனநாயகத் தமிழரசுக்...
மனைவியை வெட்டிய கணவன்: டயகம பகுதியில் சம்பவம்
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன், தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் (09)...
யாழில் சங்கு வேட்புமனுத் தாக்கல்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று புதன்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை முதன்மை வேட்பாளராகக்...
வீணை சின்னத்தில் கொழும்பில் களமிறங்கும் ராஜேந்திரன்!
மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன், பொதுத்தேர்தலில் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியின் வீணை சின்னத்திலேயே அவர் களமிறங்குகின்றார்.
மேல் மாகாணசபை உறுப்பினராக இவர் பதவி விகித்த...
நெடுந்தீவுக் கடற்பரப்பில் 21 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய...
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
நுவரெலியாவில் விபசார விடுதி முற்றுகை: ஐந்து பெண்கள் கைது!
நுவரெலியா- பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள விடுதியொன்றில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதியொன்று நேற்று (08) முற்றுகையிடப்பட்டது.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றின்...













