இன்று உயிர்த்த ஞாயிறு தினம்
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு...
வோஷிங்டன் நோக்கி பயணமானது நிதி அமைச்சர் தலைமையிலான குழு
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழு...
புதிய அமைச்சரவை குறித்து ஜனாதிபதி நாளை மந்திராலோசனை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதன்படி...
சிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே முகுனுவடவன - மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு பேர் கடைக்கு வந்து...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – மதில்மேல் பூனையாக இ.தொ.கா.!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காது என்று காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் எம்.பி....
காலி முகத்திடல் இலவச 4G – 5G
இன்று (15) முதல் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
எனினும்,...
பசில் வைத்தியசாலையில்!
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீருடையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் காண்ஸ்டபிள் பிணையில் விடுதலை
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் காண்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு...
லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா..?
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது
‘போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதி வேண்டும் என கோரியும் இலங்கை கிரிக்கெட்...












